Thursday, January 31, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS|பாகிஸ்தானில் நீதிபதியான முதல் இந்து பெண்

###TNPSC_CURRENT_AFFAIRS|பாகிஸ்தானில் நீதிபதியான முதல் இந்து பெண்!!!

பாகிஸ்தானில் நீதிபதியான முதல் இந்து பெண்!!!.


🚩 பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹhதாகோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி.

🚩 இந்து மதத்தை சேர்ந்த இவர் அந்த மாவட்டத்தின் சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

🚩 இவர் ஐதராபாத்தில் எல்எல்பி படிப்பை முடித்து பின் கராச்சியின் ஜாபிஸ்ட் பல்கலையில், சட்டப்படிப்பில் மாஸ்டர் பட்டம் பெற்றார்.


காம்பார்-ஷாக்தாத்கோட்டை சேர்ந்த சுமன் குமாரி பெண் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவருடைய சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற உள்ளார். பாகிஸ்தானின் ஐதராபாத்தில் எல்.எல்.பி.யை முடித்துள்ளார். பின்னர் தன்னுடைய சட்ட மேற்படிப்பை கராச்சியில் உள்ள சுஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். 

சுமன் குமாரியின் தந்தை  பவன்குமார் பேசுகையில், என்னுடைய மகள் பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு சட்ட உதவியை வழங்க உதவிகளை செய்வார். அவர், மிகவும் சவாலான தொழிலை தன்னுடைய கையில் எடுத்துள்ளார். அதில் கடினமான உழைப்பு மற்றும் நேர்மையினால் மேலும், மேலும் உயர்வார் என்று கூறினார். சுமன் குமாரின் தந்தை பாகிஸ்தானில் கண் மருத்துவராக  பணியாற்றி வருகிறார். 

அவருடைய மூத்த சகோதரி சாப்ட்வேர் என்ஜினீயராகவும், இளைய சகோதரி பட்டய கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார்கள். சுமன் குமாரி,  பாடகர் லதா மங்கேஷ்கர் மற்றும் அதீப் அஸ்லாம் ஆகியோரின் தீவிர ரசிகை ஆவார். பாகிஸ்தானில் இந்து மதத்தை சார்ந்த பெண் ஒருவர் நீதிபதியாவது இதுவே முதன்முறையாகும், அவருக்கு பலரது தரப்பில் இருந்து  பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கம்பார்-ஷதட்கோட் பகுதியை சேர்ந்தவர் சுமன் குமாரி. கராச்சியின் ஸாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பில் முடித்துள்ள இவர், அந்நாட்டின் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் முதல் இந்து பெண் நீதிபதியாக பதவியேற்ற உள்ளார்.

வழக்கறிஞருக்கு படிக்க வேண்டும் என முடிவெடுத்தபோது என் சமூகத்தில் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என பயப்பட்டேன். ஆனால் எனக்கு என் குடும்பம் துணை நின்றது. தற்போது நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சுமன் குமாரி. 

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.85% பேர் இந்துக்கள். கடந்த 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தான் செனட்டிற்கு இந்துப் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்துப் பெண் ஒருவர் அந்நாட்டு நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார்.







No comments:

Post a Comment