ஐ.நா-வின் தற்காலிக உறுப்பினர்களாக இணைந்த 5 நாடுகள் எவை?###CURRENT AFFAIRS - 2019
###முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 சமீபத்தில் சிங்கப்பு+ர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'எளிதில் தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்களின்" பட்டியலில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
🍀 விமான நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களிலும், உயர் பாதுகாப்புச் சோதனை அமைப்பை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
🍀 2019-ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (Climate Change performance Index - CCPI) பட்டியலில், 'ஸ்வீடன்" மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🍀 ஐ.நா பொதுச் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்களாக, பெல்ஜியம், டொமினியன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.
🍀 தேசிய மனித உரிமைகள் ஆணையமானது, பொதுச்சேவை மையங்கள் மூலமாக புகார்களை பதிவு செய்வதற்காக, 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது.
🍀 44-வது 'சர்வதேச விளம்பர சங்கத்தின் உலகளாவிய உச்சி மாநாடு" (44th global Summit of the international advertising association (IAA)) கொச்சியில் (கேரளா) நடைபெற்றது.
🍀 இந்திய மருந்து மற்றும் மருத்துவ மாநாடு - 2019, கர்நாடகத்தின் பெங்களூரில் நடைபெற்றது. (India Pharma - 2019) இம்மாநாடு இரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டது.
🍀 நேபாளத்தின் புதிய உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதியாக, ராணா (Rana ) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை, அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது.
🍀 பா.ஜ, தேர்தல் அறிக்கை குழு தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!.
No comments:
Post a Comment