Saturday, January 5, 2019

###TNPSC CURRENT AFFAIRS-2019 #கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்க புதிய இணையதளம் - 2019 #முக்கிய நடப்பு நிகழ்வுகள்

###TNPSC CURRENT AFFAIRS-2019

#கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்க புதிய இணையதளம் - 2019
#முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதி நிறுவனமான ஜெய்கா, முதல்கட்டமாக ரூ.4,770 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது.

🍀 குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான, 3 நாள் மாநாட்டில், கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்க புதிய இணையதளத்தினை, uபிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

🍀 அசாம் - அருணாச்சல பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள, முதல் பயணியர் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

🍀 கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில், ரியல்மாட்ரிட் அணி 4-வது முறையாக, கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

  • 🍀 நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, 'பிரணாப் குமார் தாஸ்", மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரிக்கான வாரியத்தின் (CBIC - Central Board of Indirect Taxes and Customs) தலைவராக நியமித்துள்ளது.



🍀 ஹைதராபாத்தை சேர்ந்த, சமன்யு பொத்துராஜு என்ற 8 வயது சிறுவன், ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

🍀 கிரு;ணகிரியில் இயங்கி வரும், தேவி வரதாலயா நாட்டியப் பள்ளி சார்பில், அரசு பள்ளி மாணவியர் ஒரு மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர்.

🍀 அகன்ற இணைய சேவைக்கான, முதல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது.

🍀 அணு ஆயுதங்களை சுமந்து சென்று, நீண்ட துhரம் பாய்ந்து, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும், திறன் உடைய, அக்னி - 4 ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலத்தில், வெற்றிகரமாக நடந்தது.

🍀 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ஆம் தேதி, தேசிய விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment