Wednesday, January 2, 2019

இனி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாது..! இன்றைய முக்கியச் செய்திகள்-ஜனவரி 02

இனி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாது..!

இன்றைய முக்கியச் செய்திகள்-ஜனவரி 02

உலகச் செய்திகள்
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும், செனட் சபை பெண் உறுப்பினருமான டெம் எலிசபெத் அறிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் விலை குறைந்ததை தொடர்ந்து விமான எரிபொருள் (ஏடிஎப்) விலை 14.7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

மாநிலச் செய்திகள்

ஆதார் சட்ட விதிகளை மீறினால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிப்பதற்கான புதிய திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

முத்தலாக் தடை செய்யும் முஸ்லீம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) பரிசீலிக்கப்படுகிறது.

தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிய ஆர்.கே.மாத்தூர் கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை தொடங்கியது. அவர் உரையை புறக்கணித்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

'சிப்" இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்களை வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருள்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனினும், சில இடங்களில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு இன்னும் தொடர்கிறது. 

மாவட்டச் செய்திகள்

பொங்கல் பரிசு வழங்குவற்காக, கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

மெட்ரோ இரயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆயிரம்விளக்கு-எல்.ஐ.சி. இடையே விரைவில் இருவழிப்பாதை அமல்படுத்தப்படவுள்ளது.

திருவாரூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் அ.தி.மு.க., தி.மு.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 

விளையாட்டுச் செய்திகள் 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சு+ப்பர்-12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை இலங்கை, வங்காளதேசம் அணிகள் இழந்துள்ளன.

ஆடவர், மகளிருக்கான 67வது தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் இன்று (புதன்கிழமை) தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை நடக்கிறது.

ரஞ்சி டிராபியில் இரயில்வேஸ் அணிக்கெதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த குருணால் பாண்டியா, அணியை 164 ரன்னில் வெற்றி பெற வைத்தார்.

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment