உலகின் மிக தலைசிறந்த உணவு எது ?
தமிழில் கேள்வியுள்ளதால், ஆளாளுக்கு இட்டலி, தோசை, கம்பங்கூழ், இலை போட்டு தமிழ் சாப்பாடு என்று ஆரம்பித்துவிடுவார்கள்! தமிழர்களுக்கே உள்ள ஒரு பலவீனமோ இது!
உலகில் வாழும் பகுதி, அதன் தட்ப வெப்பம், அங்கே கிடைக்கும் தானியங்கள், காய், கறி, மாமிச வகைகள், அம் மக்களின் பாரம்பரியம், சுவை வேறுபாடுகள், ஜீரண சக்தியில் உள்ள வித்தியாசங்கள், உடல் வாகு என்று எத்தனையோ விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.
எனது நாவுக்கும் மூக்குக்கும் வயிற்றுக்கும் ஒத்துவராத உணவு, அது தேவாமிருதமே ஆனலும் தோதுப்படாது.
காலம் காலமாக ஒரு பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு, அவர்களின் முன்னோர்கள் அனுபவ பூர்வமாக எவற்றை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்களோ அந்த உணவே சாலச்சிறந்தது.
ஐஸ்லாந்தில் வாழ்பவரிடம் இட்டலி, சட்டினியைக் கொடுத்து உலகின் மிகச்சிறந்த உணவு இது என்று சொன்னால், உங்கள் வாயில் பச்சை மீனைத்திணித்து, இதைத் தின்று பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள் என்பார்கள்!
No comments:
Post a Comment