மிதிவண்டியில் பயணம் செய்து கின்னஸ் சாதனை
##TNPSC CURRENT AFFAIRS -18-19
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 நீதிமன்றங்களில் பண பரிவர்த்தனைகளுக்கான வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், புனே மாவட்ட நீதிமன்றமானது, நீதிமன்ற கட்டணம், நீதிபதி வைப்பு, அபராதங்கள் ஆகியவற்றை 'மின் - கட்டணம்" (e - payment) மூலம் செலுத்தும் முறையை, இந்தியாவில் செயல்படுத்தியுள்ளது.
🍀 அமெரிக்காவின் பூர்வீக தொல்லியல் தளத்தில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் மிகப் பழமையான தாவர வைரஸ் வகையைச் சேர்ந்த, 'ஜீயா மே க்ரைசோவைரஸ் 1" ZMCV1 எனும் பெயரிடப்பட்ட வைரஸை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
🍀 போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கும் வகையில், டெஸ்லா நிறுவனம் உருவாக்கியுள்ள, நிலத்தடி சுரங்க போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🍀 அர்ஜென்டினா நாட்டில், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த, டைனோசரின் முழு உருவ எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
🍀 பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஸ்விப்ட் இந்தியா உள்நாட்டு சேவைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 இம்பாலில் நடந்த விழாவில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, ஆஊ மேரி கோமுக்கு, மணிப்பு+ர் மாநில அரசாங்கம் 'மீதோயிலெய்மா" (ராணிக்கு இணையானவர்) பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
🍀 தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்ற, புகழ்பெற்ற சர்வதேச மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பின் (ITTF - International Table Tennis Federation), நட்சத்திர விருதுகள் விழாவில், இந்தியாவின் மனிகா பத்ரா, 'Breakthrough Table Tennis Star" என்னும் விருதைப் பெற்றார்.
🍀 இயற்கை வளத்தை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும், உடுமலையில் ராஜா என்ற இளைஞர், 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
🍀 எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள் என்ற அமைப்பின், இந்த ஆண்டுக்கான புதிய ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில், இந்தியா 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், ஆஃப்கானிஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது.
🍀 தேவையில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு, அதிக அளவில் போன் செய்து தொந்தரவு கொடுக்கும் நாடுகளில், இந்திய நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.
🍀 அதிவேக தகவல் தொடர்பு சேவைக்காக, 'ஜிசாட் - 7ஏ" என்ற நவீன செயற்கைக் கோளை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ" வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
No comments:
Post a Comment