Thursday, January 24, 2019

###TNPSC CURRENT_AFFAIRS -2019 தெற்காசியாவில் முதன்முறையாக கே.ஜி.எஸ் மற்றும் அதிநவீன சிடி ஸ்கேனர் - 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC CURRENT_AFFAIRS -2019
தெற்காசியாவில் முதன்முறையாக கே.ஜி.எஸ் மற்றும் அதிநவீன சிடி ஸ்கேனர் - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 இணைய வழியில் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டத்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

🍀 மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நீர் மூலக்கூறுகளின் உதவியுடன், கார்பன் டை ஆக்ஸைடுகளை படிக வடிவத்தில் அமைத்து, விண்வெளி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.

🍀 சமூக ஊடகங்களில் 'மாற்றத்தை உண்டாக்கும் பெண்களை" அறிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், "WEB WONDER WOMEN" ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

🍀 இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான (India′s Longest Single Lane Steel Cable Suspension Bridge) பியொருங் பாலமானது, (BYORUNG - BRIDGE) அருணாச்சல பிரதேசத்தின் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்டு-வால் திறந்து வைக்கப்பட்டது.

🍀 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., விலக்கிற்கான விற்றுமுதல் வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து, சிறு வணிகர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🍀 தெற்காசியாவில் முதன்முறையாக, மதுரையில் கே.ஜி.எஸ், அட்வான்ஸ்டு எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன் நிறுவனத்தில், சோமோடாம் கோ.டாப் என்னும் அதிநவீன சிடி ஸ்கேனர் கருவி துவக்கி வைக்கப்பட்டது.

🍀 சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி, இரண்டாவது முறையாக வெனிசு+லா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ பொறுப்பேற்றார்.

🍀 மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக, முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான, சூ தசெங்-சாங் தைவான் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

🍀 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், மாநில சட்ட ஆணையத் தலைவராக, ஆ.மு. ஹஞ்சுரா (M.K. HANJURA) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

🍀 நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

No comments:

Post a Comment