Monday, January 21, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS - 2019 பாகிஸ்தானில் உள்ள இந்து சமய தளத்தை, தேசிய பாரம்பரிய தளமாக அறிவிப்பு..!! முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC_CURRENT_AFFAIRS - 2019
பாகிஸ்தானில் உள்ள இந்து சமய தளத்தை, தேசிய பாரம்பரிய தளமாக அறிவிப்பு..!!


முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 பழமையான முத்திரைகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட ஒடிசாவில், உள்ள பழமையான புத்தமதக் குடியேற்றப் பகுதியான லலித்கிரி, தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

🍀 பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

🍀 வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்குவா மாகாண அரசானது, பெஷாவரில் உள்ள பண்டைய இந்து சமய தளமான, பஞ்ச் தளத்தை தேசிய பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

🍀 திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருதாகக் கருதப்படும், கோல்டன் குளோப் விருது, போஹேமியான் ராப்சோடி திரைப்படம் (Bohemian Rhapsody) தட்டிச் சென்றது.

🍀 அரசானது உலகளாவிய சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் சிக்கலான பல்லுயிர்த்தன்மை மற்றும் வன நிலப்பரப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக, இந்திய வேளாண்மையை மாற்றுதல் எனும் திட்டத்தினை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியுடன் இணைந்து தொடங்கியுள்ளது.

🍀 சென்னை மியு+சிக் அகாடெமியின் 13வது நாட்டிய விழாவில், பிரபல நாட்டிய கலைஞர் சாந்தா தனஞ்செயனுக்கு 'நிருத்திய கலாநிதி விருது" வழங்கப்பட்டது.

🍀 சு+ரிய ஒளியை பயன்படுத்தி நீர் இரைக்கும் சோலார் பம்புகளை விவசாயிகள் பயன்படுத்தவதை ஊக்குவிக்க, மகாராஷ்டிர மாநில அரசானது 'அடல் சோலார் குருஷி பம்ப் யோஜனா" (Atal solar Kurushi Pumb Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

🍀 ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், போலாவரம் திட்டத்தின் கீழ், அணையில் 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள் சமீபத்தில் முடிக்கப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

🍀 ஊயுவு நுழைவுத் தேர்வில் நு}ற்றுக்கு நு}று மதிப்பெண்கள் படைத்து, உடுப்பி இளைஞர் நிரஞ்சன பிரசாத் சாதனை படைத்துள்ளார்.

🍀 ஆந்திரப் பிரதேச முதல்வர் சமீபத்தில், குப்பம் நகரில் சித்தூர் போலீசாரால் வடிவமைக்கப்பட்ட, பிராண ரக்சா இணையதள செயலியை வெளியிட்டார்.

🍀 கோவையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில், ′police e eye′ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment