###TNPSC_CURRENT AFFAIRS|சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த சிவலிங்கம்!! - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில், 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதில் பொருளாதாரத்தில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🍀 உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, UDAN-3 திட்டத்தின் கீழ் அந்தமான் தீவுகளில் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது.
🍀 பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையானது, இந்திய வனப்பணியை (IFoS) இந்திய வனம் மற்றும் பழங்குடியினர் பணி (IFTS) என பெயர் மாற்றம் செய்ய முன்மொழிந்துள்ளது.
🍀 ராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இணைக்கும், இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட, இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
🍀 சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனம் சார்பில், உலக அமைதியை வலியுறுத்தி, 4 மணி நேரத்தில் 950 மாணவ, மாணவிகளின் முகங்களில் ஓவியம் வரையப்பட்ட நிகழ்வுக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.
🍀 தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்று, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளது.
🍀 சீனாவில் இளம் பெண் ஒருவருக்கு 72 மணி நேரம் இதயத்துடிப்பை நிறுத்தி, அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
🍀 வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது, குறிப்பிட்ட மற்றும் அறிவியல் முறையில் உள்நாட்டு மாட்டினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.
🍀 நாசாவின் வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கை கோளான, TESS (Transiting Exoplanet Survey Satellite)"-ஆனது HD21749 என்னும் நட்சத்திரத்தை சுற்றி வரும் HD21749d என்று பெயரிடப்பட்ட, புதிய கோளைக் கண்டறிந்துள்ளது.
🍀 நட்சத்திரத்தை விழுங்கி சு+ரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை ஒன்றை, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கண்டுபிடித்து உள்ளது.
🍀 புவிசார் தொடர்புகளுக்கான ஸோங்ஸிங் 2 டி (Zhongxing-2D) என பெயரிடப்பட்ட, புதிய செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
No comments:
Post a Comment