####TNPSC CURRENT AFFAIRS - 2019
இந்தியாவின் மிக நீளமான பாலம் எது?
முக்கிய நடப்பு நிகழ்வுகள் -2019
🍀 தொலையுணர்வி ஃ புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களின், தொடர்ச்சியான தகவல் பரிமாற்ற மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்தியா ஐனுசுளுளு என்ற அமைப்பை செலுத்த உள்ளது.
🍀 இந்தியாவின் மிக நீளமான, ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை, அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியில் கட்டப்பட்டுள்ள பொகீபில் பாலம் பெற்றுள்ளது.
🍀 சமீபத்தில் ′உயர் அச்சுறுத்தல்′ என்ற பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள, இந்திய கான மயில் பறவைகளை (GIB) பாதுகாப்பதற்கான, அவசர கால பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக, வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
🍀 நிதி ஆயோக்கானது சமீபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான, நீடித்த வளர்ச்சி இலக்குகள் (ளுனுபு) குறியீட்டின் அடிப்படையில், இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள், ஐ.நா.வின் ளுனுபு இலக்குகளை அடையும் பாதையில், முதல் இடங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
🍀 அந்தமான் நிகோபரில் உள்ள ரோஸ் தீவுக்கு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நெயில் தீவுக்கு சாஹித் தீவு என்றும், ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீவு என்றும் பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
🍀 புருண்டியின் அரசு கிடிகாவை (Gitega), அந்நாட்டின் புதிய அரசியல் தலைநகரமாக அறிவித்துள்ளது.
🍀 மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன், ஒருங்கிணைந்த மேகாலயா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை, மேகாலயாவின் முதல்வரான கான்ராட் மு. சங்மா துவங்கி வைத்தார்.
🍀 போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 11வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
🍀 மஹாராஷ்டிரா பத்திரிகையாளர் சங்கம் சார்பில், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குருவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment