Monday, January 21, 2019

###TNPSC-CURRENT_AFFAIRS- 2019 மீட்புப் பணியில் ஈடுபடும், ஏடி ஏடி என்ற புதியவகை வாகனம்| முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC-CURRENT_AFFAIRS- 2019
மீட்புப் பணியில் ஈடுபடும், ஏடி ஏடி என்ற புதியவகை வாகனம்|
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 இந்திய விமான நிலைய ஆணையமானது, 16 விமான நிலையங்களில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியாலான பொருட்களுக்கு, சமீபத்தில் தடை விதித்துள்ளது.

🍀 மஹhராஷ்டிராவில், 13 வயது சிறுவன், ஆர்ய மான் தாத்ரா எழுதிய, ′ஸ்னோ பிளேக்ஸ்′ என்ற கவிதை தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.

🍀 கர்நாடக மாநிலம் பெங்கள+ரில், விமான நிலையத்துக்கு செல்லும் பெண் பயணியருக்கென, பெண் டிரைவர்கள் இயக்கும் வாடகைக் கார்கள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

🍀 நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேம்படுத்த, நந்தன் நிலேகனி தலைமையில், 5 நபர்கள் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

🍀 பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் ஏடி ஏடி என்ற புதியவகை வாகனம் ஒன்றை, ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது.

🍀 மூத்த ஊடகவியலாளரான தினு ரன்தீவிற்கு அவரின் வாழ்நாள் முழுவதுமான, பத்திரிக்கைகளுக்கான பங்களிப்பிற்காக, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

🍀 சர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ எம் எஃப் அமைப்பில், முதல் பெண் பொருளாதார நிபுணராக, மைசு+ரை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில், இந்தியாவின் சணல் ஏற்றுமதி 24 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🍀 பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த, முஸ்லிம் அல்லாதோருக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.

🍀 குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்டவர், காணாமல் போனோர் உள்ளிட்டோரை அடையாளம் காண, டி.என்.ஏ, எனப்படும், மரபணு சோதனை நடத்த அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.


L

No comments:

Post a Comment