ஆறுமுக நாவலரை, வசனநடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டியவர் யார்?|
8ஆம் வகுப்பு - முதல் பருவம்|
பொதுத்தமிழ்
1. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் ————— - பாரதியார்
2. வீரமாமுனிவரின் இயற்பெயர் ————— - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
3. ஆறுமுக நாவலரை, 'வசனநடை கைவந்த வல்லாளர்" எனப் பாராட்டியவர் ————— - பரிதிமாற்கலைஞர்
4. குற்றியலுகரத்திற்கு ————— மாத்திரை. - அரை
5. குற்றியலிகரத்திற்கு ————— மாத்திரை. - அரை
6. முற்றியலுகரத்திற்கு ————— மாத்திரை. - ஒரு
7. கீழ்க்காணும் தொடர்களை செயப்பாட்டு வினையாக்குக.
அ) கலையரசி துணியைத் தைத்தாள். - துணி கலையரசியால் தைக்கப்பட்டது.
ஆ) ஆசிரியர் பாடத்தை நடத்தினார். - பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.
இ) பூங்குழலி உணவைச் சமைத்தாள். - உணவு பு+ங்குழலியால் சமைக்கப்பட்டது.
8. ′கேண்மை′ - பொருள் எழுதுக. - நட்பு
9. ′உடுக்கை′ - பொருள் எழுதுக. - ஆடை
10. ′அல்லல்′ - பொருள் எழுதுக. - துன்பம்
11. ′கிழமை′ - பொருள் எழுதுக. - உரிமை
12. ′நகுதல்′ - பொருள் எழுதுக. - சிரித்தல்
13. ′இடுக்கண்′ - பொருள் எழுதுக. - துன்பம்
14. ′செந்தமிழ்′ - பிரித்து எழுதுக. - செம்மை + தமிழ்
15. ′பேச்சுக்கலை′ - பிரித்து எழுதுக. - பேச்சு + கலை
No comments:
Post a Comment