டயட் மொழிகள்:
சாராயம் எப்படி பிரச்சனைகளை இரண்டுமணிநேரம் மட்டும் மறக்க வைக்கிறதோ அதுபொல் குப்பை உணவு பசியை இரண்டுமணிநேரம் ஒத்தி போடதான் பயன்படும்.
சோடியம் பென்சைட்டை சாப்பிடும் மிருகம் எதையாவது காட்டினால் மெக்டானல்ட்ஸ் பர்கரை உணவு என ஒத்து கொள்ளலாம்.
எதையும் அளவுடன் உண்ணலாம் என்பது நல்ல கொள்கை தான். ஆனால் அதற்காக ப்ளூடோனியத்தை அளவுடன் சாப்பிட முயலவேண்டாம்.
மனிதனின் 99.99% ஜீன்கள் ஒரு பருக்கை சாதம் அவன் வாயினுள் நுழையும் முன்பு உருவானவை.
உடலை நேசிப்போம்
பலரும் ஆரோக்கியம் என்றால் சிக்ஸ் பேக் (அல்லது) துளியும் தொப்பை இல்லாத வயிறு (அல்லது) ஒரு குறிப்பிட்ட எடையை அடைவது என நினைத்து கொள்கிறார்கள். இது முழுக்க தவறு.
ஆரோக்கியம் என்பது இயற்கையானது. படங்களில் நடிகர்கள் வைக்கும் கட்டுமஸ்தான உடல், நடிகைகளுக்கு இருக்கும் கொடியிடை எல்லாம் ஸ்டிராயிட், போட்டோஷாபிங் இன்னபிற உத்திகளால் உருவாக்கபட்டது. உடலில் கொழுப்பு குறைவாக இருப்பவர்களுக்கு சிக்ஸ் பேக் இயற்கையாக வரும். ஆனால் அது புரப்ஷனல் பாடிபில்டர்களுக்கு இருப்பது மாதிரி கட்ஸுடன் இருக்காது. அப்படியே வந்தாலும் சில மாதங்களில் மறையும். அதை எண்ணீ அல்லது அதை ஒரு குறிக்கோளாக நினைத்து கொள்ள கூடாது.
உங்களுக்கு சுகர், பிரஷர் முதலுய வியாதிகள் இல்லாமல் இருந்து, தொப்பை இல்லாமல், ஊளை சதை இல்லாமல், நடக்க சிரமபடாமல், உடல்பயிற்சி செய்ய முடிந்தால் நீங்கள் நார்மலாக தான் இருக்கிறீரக்ள். பி.எம்.ஐ சார்ட்டை பார்த்து எனக்கு வெயிட் அதிகமா, குறைவா என அதன்பின் குழம்பிகொள்ளவேண்டியது கிடையாது. மிக ஒல்லி, மிக குண்டு இரண்டும் நல்லது கிடையாது. அதே சமயம் பி.எம்.ஐ சார்ட்டில் இருப்பது போலவே எடை இருக்கவேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எடையை விட ஆரோக்கியத்துக்கும், உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
எடை வருடம் முழுக்க பிளக்சுவேட் ஆகும். சில சமயம் என்னதான் டயட் கண்ட்ரோலில் இருந்தாலும் எடை ஓரிரு கிலோ ஏறும். சில சமயம் குப்பை உணவே உண்டாலும் எடை இறங்கும். என்னதான் உடல்பயிற்சி செய்தாலும் மஸில் கட்ஸை இழந்து சற்று நீர் எடடி ஏறும். இது அனைத்தும் நார்மல் ஆனதே. சிலமாதம் முன்பு அழகா இருந்தேன், மிக ட்ரிம்மா இருந்தேன். இப்ப சற்று பூசினாற் போல் ஆகிவிட்டது என வருந்தவேண்டாம். உங்கள் உடல் எதையும் காரணத்துடன் தான் செய்யும். வெயில் காலத்தில் அது உடலில் சற்று நீரை தேக்கி வைக்கலாம். குளிர்காலத்தில் எல்லாருக்கும் கொலஸ்டிரால் அளவு கட்டாயம் ஏறும். இது எல்லாம் நார்மல் ஆனதே
நம் உடல் கடும் எடையை தூக்கவும், உடலை வில்லாக வளைத்து ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி செய்யவும் ஏற்றது அல்ல. 300 கிலோ எடையை தூக்கி சுமப்பது இயற்கை அல்ல. மராதான் ஓடுவதும் இயற்கை அல்ல. அதனால் முடியாத காரியங்களை செய்ய சிரமபடுவதும், அதுதான் ஆரோக்கியம் என நினைப்பதும் தவறு. ஸ்போர்ட்ஸ்மேன்கள் மாதிரி ஆரோக்கியம் குறைவான நபர்கள் எங்கும் கிடையாது. பல ஸ்போர்ட்ஸ்மேன்களும் பெயின் கில்லர்கள் மூலம் தான் நடமாடவே செய்கிறார்கள்.
உடலை மதியுங்கள். சிலருக்கு இயற்கையாக மெசாமார்ப் எனப்படும் குண்டான உடல்வாகு இருக்கும். சிலர் எக்டாமார்ப் எனும் வகை ஒல்லியாக இருப்பார்கள். அது இயல்பு. அதை எண்ணி வருந்தவேண்டாம். அதை மாற்ற முயலவேண்டாம். இயற்கை உங்களுக்கு அளித்த கொடையாக அதை கருதிகொள்ளுங்கள்.
நாக்கில் உள்ள சுவை அரும்புகளின் (டேஸ்ட் பட்ஸ்) ஆயுள் காலம் ஏழு முதல் பத்து நாட்கள்.
அதனால் எதாவது குப்பை உணவை நிறுத்தவேண்டுமெனில் 10 நாட்களுக்கு அவற்றை நிறுத்தினால் போதும். பழைய டேஸ்ட் பட்ஸ் இறந்து புதுடேஸ்ட் பட் வந்துவிடும். அதன்பின் அந்த குப்பை உணவின் சுவையெ நம் நாக்குக்கு நினைவில் இருக்காது. அதனால் கிரேவிங்கும் வராது.
அதுபோல் பிடிக்காத நல்ல உனவை (உதாரணம்: கீரை) தொடர்ந்து 10 நாள் உண்டுவந்தால் அந்த சுவையும் நம் நாக்குக்கு பழகி அதன்பின் அதை தொடர்வோம்.
நம் குழந்தைகள் குப்பை உணவை பெருமளவில் உண்பது வருத்தமான உண்மை. அதை விட வருத்தம் என்னவெனில் ஐஸ்க்ரீம், சாக்லட் தான் குப்பை உணவு என பலரும் நினைப்பதுதான். குழந்தைகள் காலையில் உண்ணும் சீரியலே குப்பை உணவுதான். அதில் ஏகப்பட்ட கலர்கள், பிரசர்வேடிவ்கள், சர்க்கரை. ரொட்டி, பர்கர், சான்ட்விச் என அவர்கள் உண்ணும் வழக்கமான உணவுகள் அனைத்திலும் இந்த கலர்களும், பிரசர்வேடிவ்களும் நீக்கமற நிறைந்துள்ளன.
இட்லி, தோசையில் ஊற்றூம் வெஜிட்டபிள் ஆயில் முழுக்க டிரான்ஸ்பேட். சாம்பார் பொடி, மசாலாவை பற்றி சொல்லவே வேண்டாம். குழந்தைகளுக்கு பிடித்த நூடில்ஸ் என்பது குட்டைகோதுமையை டிரான்ஸ்பேட் நிரப்பிய வெஜிட்டபிள் ஆயிலில் ப்ரை செய்து, பிரசர்வேடிவ்களை போட்டு, கூட டேஸ்ட்மேக்கர் எனும் பெயரில் மேலும் கெமிக்கல்களை கலந்து தயாரிப்பவை.
சிசுக்களுக்கு கொடுக்கும் பார்முலாவில் இருக்கும் சர்க்கரையால் ஆறுமாத குழந்தைகளுக்கு கூட டயபடிஸ் வருகிறது.
முக்கியமா செய்யவேண்டியது துரித உணவை தவிர்க்கவேண்டியது. சாக்லட், ஐஸ்க்ரீம் மாதிரி ட்ரீட்களை தடுக்க வேண்டியது இல்லை. அது கெடுதி என அவர்களுக்கே தெரியும். உணவு என நினைத்து கொடுக்கும் நூடில்ஸ், சீரியல் குப்பைகளை ஒழித்து, உணவகம் பக்கம் அதிகம் கூட்டி போகாமல் வீட்டில் சமைப்பதை கொடுத்தால் போதும். சமையல் எண்ணெயாக நெய், தேங்காய் எண்ணெய் முதலியவற்றை பயன்படுத்தி ஆச்சி மசாலா மாதிரியானவற்றை நிறுத்தி வீட்டில் செய்த மசாலா (மிளகு, பெப்பெர், பூண்டு) மாதிரியானவ்ற்றை பயன்படுத்தலாம்.
முக்கியமா மூன்று வேளையும் வீட்டு உணவை அவர்கள் உண்டாலே போதும். பழம், காய், பால், பாதாம் மாதிரி கொட்டைகளை கொடுத்து பழக்கபட்த்தணும். பசியுடன் இருக்க விட்டால் குப்பை உணவுகலை உண்டுவிடுவார்கள்.
முளைகட்டின எதுவும் ஒரு கரு மாதிரி. முட்டையை திருடபோனால் கோழி ஆவேசமா சண்டைக்கு வரும். அதுமாதிரி முளைகட்டின பயிறை, தானியத்தை பாதுகாக்க இயற்கை லெக்டின் எனும் பூச்சிகொல்லி மருந்தை முளைகட்டின பயிறுகளில் வைத்திருக்கிறது. லெக்டின்கள் தக்காளி முதல் பல காய்களில் காணப்படும். ஆனால் அவற்றின் அளவு மிக குறைவு. முளைகட்டுவதால் லெக்டின்களின் அளவும், வீரியமும் பலமடங்கு குறைக்கிது. லெக்டின்களின் முக்கிய வேலை செல்களின் மெம்பெரேன்களை பிளப்பதுதான். அதனால் குறைந்த அளவில் இதை சாப்பிட்டால் கான்சர் செல்களை அவ்வளவு ஏன் பாக்டிரியா, வைரசை கூட பிளந்து அழித்துவிடும். ஆனால் பயறுகளில் இருப்பது மிக,மிக,மிக அதிக அளவு லெக்டின். அது நம் ஜீரண உறுப்புகளில் உள்ள செல்களை கூட கிழித்து பதம்பார்க்கும். பச்சையாக பயறுவகைகளை உண்டு வந்தால் வயிற்றுவலி வரும். நூறு டிகிரி வெப்பத்தில் சுமார் 15 நிமிடம் பயறுவகைகளை கொதிக்க வைத்து உண்டால் அதில் உள்ல லெக்டின்கள் அழிந்துவிடும். அதே சமயம் பயறுவகைகளில் உள்ள வைட்டமின் அனைத்தும் அந்த நீரில் கரைந்துவிடும். அதில் உள்ள பைட்டிக் அமிலம் அதில் உள்ள எந்த மினரலையும் உடலில் சேரவிடாது. அதில் அதன்பின் வெறும் புரதமும், நார்சத்தும் மட்டுமே இருக்கும். நார்சத்து ஜீரணம் ஆகாத நார்சத்து. புரதம் தரம் குறைந்த புரதம்.
நூறுடிகிரி என்பது நீர் கொதிநிலைக்கு வரும் பாய்லிங் பாயின்ட் வெப்பம். அதில் 15 நிமிடம் கொதிக்க வைப்பது என்றால் எச்சரிக்கையாக செய்யவும்.
ஆக முளைகட்டின பயறு ஒன்றும் மாஜிக் புட் அல்ல. இயற்கை நம்மை உண்ணகூடாது என கட்டளை இட்ட உணவுவகை அது. அதை உண்ண தகுந்ததாக மாற்ற இத்தனை மெனகெட்டும் அதனால் பெரிதாக பலன் இல்லை.
கொலஸ்டிராலை வேண்டியமட்டும் அலசியாகி விட்டது. நாகரிக மனிதனின் இன்னொரு வியாதியான டயபடிஸ் எனும் சர்க்கரை வியாதியை அடுத்து அலசுவோம்.
டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.
டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.
டயபடிஸ் வரக் காரணம் என்ன?
நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு
க்ளுகோஸ்
லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை
ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை
நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.
ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.
சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?
இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?
ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.
துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.
“இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.
சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.
ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்
நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100
உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)
வெள்ளை சர்க்கரை 64
முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை
வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)
வெள்ளை ரொட்டி 87
ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.
ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.
ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.
காலை ஐந்து இட்டிலி
மதியம் சாதம், சாம்பார், ரசம்,
மாலை வடை, டீ காப்பி
இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா
இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.
தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?
இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?
கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.
காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.
ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?
இட்டிலி மற்றும் சப்பாத்தி.
சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.
சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!
இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற உணவுகளை தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?
டயபடிஸ் ஏன் வருகிறது?
உணவில் உள்ள சர்க்கரையை ஜீரணம் செய்ய உடல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. நாளடைவில் உடல் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைகிறது. இந்த நிலையில் நம் பேன்க்ரியாஸ் உற்பத்தி செய்யும் இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை ஜீரணம் செய்ய போதுமானதாக இருப்பதில்லை. அதனால் பேன்க்ரியாஸ் தன் சக்திக்கு மீறி வேலை செய்து மேலும் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது.
இது நம் இன்சுலின் ரெசிஸ்டென்சை மேலும் அதிகரிக்கிறது. கடைசியில் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றும் நிலைக்கு ஆளாகிறோம். இதுவே டயபடிஸின் வரலாறு
இப்போது ஒரு அடிப்படை கேள்வி.
சர்க்கரையை உண்பதை நாம் நிறுத்தினால் என்ன ஆகும்?
நம் உணவில் ஒரே ஒரு கிராம் சர்க்கரை கூட இல்லையெனில் என்ன ஆகும்?
நம் உணவில் சர்க்கரை இல்லை எனில் ஒரே ஒரு சொட்டு இன்சுலினை கூட நம் பேன்க்ரியாஸ் உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. ஊசியில் இன்சுலினை நாம் ஏற்றிகொள்ளவும் வேண்டியது இல்லை.
இதுதான் லோ-கார்ப் டயட்டுகளின் அடிப்படை.
சர்க்கரை குணமாகவேன்டுமெனில் உணவில் இருக்கும் சர்க்கரை அளவை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறையுங்கள். ஐடியலாக ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் சர்க்கரை நமக்கு வேண்டியதே இல்லை. ஆனால் சராசரியான 2500 காலரி உணவில் சுமார் 500 கிராம் சர்க்கரை உள்ளது. அதவாது தினம் அரை கிலோ சர்க்கரையை உணவின் மூலம் அடைகிறோம்.
தினம் அரை கிலோ சர்க்கரையை உண்டுவிட்டு டயாப்டிஸ் ஜெனடிக்கலா வருவது, அதை குணமாக்க முடியாது என்றால் என்ன செய்ய? தினம் அரை கிலோ சர்க்கரை உண்பதை நிறுத்தும்வரை டயபடிஸ் குணம் ஆகாது என்பதை நானும் ஒத்துகொள்கிறேன்.
டைப் 2 டயபடிஸ் வந்தபின் துரதிர்ஷ்டவசமாக பலருக்கும் கிட்னி பழுது ஆகிவிடும். காரணம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை கிட்னிகளுக்கு அதிக வேலை கொடுத்து கிட்னிகளை ரிப்பேர் ஆக்கிவிடும்.
அதன்பின் டயலசிஸ், கிட்னி மாற்று சிகிச்சை போன்றவற்றை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.
டயபடிஸ் முற்றி கிட்னி பழுதுபட்டிருந்தால் (நெப்ரோபதி) அதை கூட காட்டுமிராண்டி உணவு குணப்படுத்தும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
நெப்ரோபதியை ரிவர்ஸ் செய்வது மிக கடினம். ஆனால் சோதனை சாலையில் சில எலிகளுக்கு செயற்கையாக டைப்1 டயபடிஸ் மற்றும் டைப் 2 டயபடிஸ் வரவழைத்து அதை நெப்ரோபதிக்கு முற்ற வைத்து அவற்றின் கிட்னிகளை பழுதாக்கினர். அதன்பின் அந்த எலிகள் 8 வார கெடொஜெனிக் டயட்டில் (தினம் 20 கிராமுக்கும் குறைவான சர்க்கரை மற்றும் உயர் கொழுப்பு உணவு) இருக்கவைக்கபட்டன. அதன்பின் அந்த எலிகளை கொன்று போஸ்ட்மார்ட்டம் செய்ததில் அனைத்து எலிகளுக்கும் நெப்ரோபதி ரிவர்ஸ் ஆகி இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
லங்க் கேன்சருக்கு தீர்வு பில்டர் சிகரெட் பிடிப்பது அல்ல. சிகரெட்டை ஒழிப்பது.
டயபடிசுக்கு தீர்வு குளுகோசை குறைவாக உண்பது அல்ல. உணவில் குளுகோசை ஒழிப்பது.
8 வாரம். உணவில் குளுகோஸ் தினம் 20 கிராம் அளவுக்கு மட்டும் சேர்க்கவேன்டும். அவ்ளோதான் தீர்வு. எட்டாவது வாரத்தில் டயபடிஸ், ஹைபிலட் பிரஷர், ஒபீசிட்டி எல்லாம் ஓடி போயிருக்கும். உணவில் காலரி கட்டுபாடு இல்லை, பசி இல்லை, புதுவாழ்வு. டயபடிஸ், ஹைபிலட் பிரஷரில் இருந்து விடுதலை. ஹார்ட் அட்டாக்கிலிருந்து விடுதலை. ஆரோக்கியமாக வாழ்வது எளிது. ஒன்றும் சிரமம் இல்லை. Truth will set you free.
சர்க்கரை வியாதியின் வரலாறு
19ம் நூற்றாண்டில் டயபடிஸ் அதிக அளவில் பரவ துவங்கியது. அன்று சிறுநீரில் எறும்புகள் மொய்த்தால் டயபடிஸ் என அறிந்துகொள்வார்கள். பண்டைய இந்தியாவில் சிறுநீர் இனிப்பாக இருந்ததால் டயபடிசை மதுமேகம் என அழைத்தார்கள்.
அன்று அறிவியல் முன்னேறாத காலகட்டத்தில் டயபடிசுக்கு காரணம் என்ன என்பதை லேபில் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் அப்சர்வேஷன் (சுற்றிலும் நிகழ்தலை வைத்து உணர்தல்) மூலம் அறிய முயன்றார்கள். டயபடிஸ் யார், யாருக்கு உள்ளது, அவர்கள் என்ன உண்கிறார்கள் என்பதை வைத்து டயபடிஸின் காரணிகளை ஆராய்ந்தார்கள்.
1913ல் பிரப டயபடிஸ் ஆய்வாளர் ப்ரெட்ரிக் ஆலன் ட்ராப்பிஸ்ட் மான்க் எனப்படும் ஒரு வகை கத்தோலிக்க பாதிரியார்களை ஆராய்ந்தார். இவர்கள் மிகதீவிரமான சைவர்கள். இவர்களது உணவு முழுதானியம், சர்ச்சில் தயாரித்த மது, சர்ச் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள் இவை மட்டுமே. கிறிஸ்துமஸ் மாதிரி பண்டிகைகளில் மாத்திரமே இனிப்பு அனுமதிக்கபடும். இவர்களிடையே டயபடிஸ் மிக அதிக அளவில் இருப்பதை ப்ரெட்ரிக் ஆலன் கண்டறிந்தார். அதுபோல சர்க்கரை ஆலைகளில் பணிபுரிபவர்களுக்கும் டயபடிஸ் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. அதுவும் இந்தியர்கள் மூலம்!!!!
1907ல் ப்ரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன் இந்தியாவில் ஒரு சிம்போஸியம் நடத்தியது. அதில் பேசிய ப்ரிட்டிஷ் சர்ஜன் ஜெனெரல் "இந்தியாவில் சோம்பேறிகள், பணகாரர்கள்" மத்தியில் டயபடிஸ் பெருகுவதாக கூறினார். அதே மாநாட்டில் பேசிய கல்கத்தா பல்கலைகழ பேராசிரியர் கைலாஷ் சந்தர் போஸ் "மாட்சிமை தாங்கிய ப்ரிட்டிஷ் மன்னர் அரசாட்சியில் இந்தியர்களுக்கு பணமும், கல்வியும், வளமும் அதிகரித்து பணகாரர்களின் வியாதியான டயபடிசும் வந்ததாக" கவலை தெரிவித்தார்.
அன்று ஒட்டுமொத்த வங்காள ஜனதொகையில் 10% பேர் டயபடிஸால் பாதிக்கபட்டு இருப்பதாக அளவிடபட்டது. அவர்களது உனவு அரிசி, மாவு, பருப்புகள், சர்க்கரை. ஒப்பீட்டளவில் அன்று இந்தியாவில் 76,000 ப்ரிட்டிஷ் வீரர்கள், அதிகாரிகள்,நிர்வாகிகள் இருந்தார்கள். இந்த 76,000 பேரில் வெறும் எட்டே பேருக்கு மட்டுமே டயபடிஸ் இருப்பதாக கண்டறியபட்டது
ஜார்ஜ் கேம்பெல் எனும் டயபடிஸ் மருத்துவர் தென் ஆப்பிரிக்கா, டர்பனில் அரசு மருத்துவமனையின் டயபடிக் பிரிவு தலைவராக இருந்தார். அங்கே அனுமதிக்கபட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். தெனாப்பிரிக்க கரும்பு தோட்டங்களில் பணிபுரிய ப்ரிட்டிஷ் அரசால் குடியமர்த்தபட்டவர்கள். 70% பேர் வறுமைகோட்டுக்கு கீழே வாழ்ந்தார்கள். தினம் உண்ணும் காலரி அளவு 1600க்கு கீழ். 1600 காலரிக்கு கீழ் உண்பது பல நாடுகளில் பட்டினிக்கு ஒப்பிடபட்டு அரசின் புட் ஸ்டாம்ப் முதலிய உதவிகளுக்கு தகுதி பெறுவார்கள். இவர்கள் தினமும் வெறும் கையால் ஏழரை டன் கரும்பை வெட்டுபவர்கள். உடல் உழைப்புக்கு பஞ்சமில்லாதவர்கள்.
பணகாரர்களின் வியாதி, சோம்பேறிகளின் வியாதி என கருதப்பட்ட டயப்டிஸ் இப்படி ஏழ்மை, குறைந்த காலரி உணவு, அதீத உடல் உழைப்பில் ஈடுபடும் நடால் பகுதி இந்தியர்களுக்கு வந்தது ஏன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ஜார்ஜ் கேம்பெல் தினறினார். பல இந்திய கிராமங்களில் சுமார் 33% பேர் டயபடிசால் பாதிக்காப்ட்டு இருந்தனர். அன்று தென்ன் ஆபீரிக்காவில் இருந்த இந்தியர்கள் எண்ணிக்கை 2.5 லட்சம். 10 வருடத்தில் ஜார்ஜ் கேம்பெல் மட்டும் சுமார் 6200 இந்திய டயப்டிக் பேஷண்டுகளுக்கு வைத்தியம் பார்த்து இருந்தார்.
அதன்பின் அவர்களது உணவை ஜார்ஜ் கெம்பெல் ஆராய்ந்தார். சர்க்கரை ஆலைகளில் பணிபுரிபவர்கள் என்பதால் அவர்களுக்கு வருடம் எண்பது பவுன்டு சர்க்கரை இலவசமாக வழங்கபட்டது. அவர்களது உணவில் கொழுப்பின் சதவிகிதம் மிக குறைவு. ஆக இதுதான் அவர்களது டயப்டிஸ் அதிகரிப்புக்கு காரணம் என ஜார்ஜ் கேம்பெல் எழுதினார்.
ஆபிரிக்க பழங்குடி இனமான ஜூலுக்களிடையேயும் இம்மாதிரி வித்தியாசம் இருந்தது. காட்டுபுறத்தில் வாழும் ஜூலுக்களுக்கு டயப்டிஸ் சுத்தமாக இல்லை. அவர்களை விரிவாக ஆராய்ந்த கேம்பெல் "டயபடிஸ் இருக்கும் ஒரு ஜூலுவை கூட நான் பார்க்கவில்லை" என எழுதுகிறார். அதே நகர்ப்புறத்தில் ப்ரிட்டிஷ் அரசுக்கு கட்டுபட்டு, நகர நாகரிகத்தில் திளைத்த ஜூலுகக்ளுக்கு பெருமளவில் டயபடிஸ் தாக்கியது. அவர்கள் வருடம் 90 பவுன்டு சர்க்கரை உண்பதை கேம்பெல் கண்டறிந்தார்.
இப்படி ஏழ்மையில் இருக்கும் இந்தியர்கள், வசதியில் இருக்கும் நக்ர்ப்புற ஜூலுக்கள் இருவருக்கும் டயபடிஸ் வர காரணம் அதிகரித்த சர்க்கரை நுகர்வே என அறிய இந்த ஆய்வுகள் வழிவகுத்தன.
ஹெல்த் கைடுலைன் எல்லாம்
மருந்து கம்பனி பணம் சம்பாதிக்கவும்
வெயிட் வாட்சர்ஸ், சவுத் பீச் டயட் மாதிரி கம்பனிகள் பணம் சம்பாதிக்கவும்
நைக்கி, அடிடாஸ் மாதிரி கம்பனிகள் கல்லா கட்டவும்
தெருவுக்கு தெரு கிராஸ் பிட்னஸ் மாதிரி ஜிம்கள் பெருகவும்
பாக்டிரியாவும், வைரசும் கூட தீன்ட விரும்பாத பிரசர்வேடி சேர்த்த குப்பைகளை டயட் புட் என்ற பெயரில் விற்கவும் தான் வழி வகுத்துள்ளது
எல்லாத்தையும் தூக்கி போடுங்கள்
கடந்த நூறு ஆன்டுகளில் அறிமுகமான எந்த உணவையும் தொடமட்டேன் என நீங்கள் முடிவெடுத்தால் ஒபிசிட்டி அத்துடன் அழிந்தது. கூடவே அதை வைத்து கல்லாகட்டும் நைக்கி, வெயிட் வாட்சர்ஸ் ஆட்டம் எல்லாம் ஒழிந்தது.
10,000 ஆண்டுகளில் அறிமுகமான உணவுகளை உண்ணமட்டேன் என முடிவெடுத்தால் நாகரிக மனிதனின் வியாதிகளில் 99% அழிந்துவிடும்.
நைக்கி ஷூ போட்டுகொண்டு, காலையில் என்ஷுயூர் குடித்துவிட்டு வாரம் ஒரு மராதான் ஓடினால் ஷூ தேயுமே ஒழிய உடல் எடை என்னவோ குறையாது.
நாகரிக மனிதனின் வியாதிகள் (டயபடிஸ்)
டயபடிசுக்கு என்ன காரணம் என்பது பலவருடமாக 20ம் நூற்ராண்டு மருத்துவர்களை வாட்டி வந்த குழப்பம். உலகில் பல இடங்களில் இருந்து வந்த ஆய்வுகள் பல குழப்பமான முடிவுகளை அளித்தன. உதாரணமாக “வெள்ளை சர்க்கரை உண்பதுதான் டயபடிசுக்கு காரணம். இயற்கையான தானியம், பழங்களில் இருக்கும் சர்க்கரை சத்து டயபடிசுக்கு காரணம் அல்ல” என்பது 20ம் நூற்றாண்டின் மத்தியில் மருத்துவர்களிடம் நிலவிய மூட நம்பிக்கை. இன்றும் கூட பலர் சமைக்காமல் உண்ணும் பழம், காய்கறிகள் மூலம் சர்க்கரை வராது என நம்புகிறார்கள். ஆனால் 60களில் நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினரிடையே நிகழ்த்தபட்ட ஆய்வு இந்த எண்னத்தை தகர்த்தது. மாவோரிகள் பெருமளவில் டயபடிஸ், கொலஸ்டிரால், மாரடைப்பு, தொப்பை ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தனர். பெண்களில் சுமார் 60% பேர் குண்டாக இருந்தனர். அவர்கள் உணவு பெரும்பாலும் நியூசி அரசு ரேஷன் மூலம் கிடைத்த விலைகுறைவான கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய உணவுதான் (ரொட்டி, மாவு, பிஸ்கட்டுகள், சீரியல்கள்). கணக்கு போட்டதில் ஒரு மாவோரி வருடம் ஒன்றுக்கு 70 கிலோ சர்க்கரையை இந்த உணவுகள் மூலம் மட்டுமே பெற்றது தெரிய வந்தது. (தினம் 200 கிராம் தானியம்,பழம், உண்டால் வருடம் 70 கிலோ சர்க்கரை நம் உணவிலும் சேரும்.)
டயபடிஸ் அல்லாத வேறு வியாதிகளை ஆராய்ந்து வந்தவர்களும் அது சர்க்கரையுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். உதாரணமாக உலகயுத்த காலத்தில் ஹாங்காங் சிறைகளில் கைதியாக அடைபட்டிருந்த க்ளீவ் எனும் மருத்துவர் அங்கிருந்த சிறைகைதிகள் ஒருவர் விடாமல் அல்சர் வியாதியால் பாதிக்கபட்டிருந்ததை அறிந்தார். யுத்த காலத்தில் மாமிசம் கிடைக்காததால் கைதிகளுக்கு வெறும் அரிசி உணவு மட்டுமே தினம் மூன்று வேளை வழங்கப்பட்டது. யுத்தம் தீவிரமாகி வெள்ளை அரிசி கிடைப்பது நின்று கைதிகளுக்கு விலை குறைந்த மட்டமான பழுப்பு அரிசியும், கம்பு, பார்லி முதலிய தானியங்களும் வழங்கபட்டன. பல சமயங்களில் அவர்களுக்கு உணவு கூட வழங்கபடவில்லை. ஆனால் அதிசயிக்கதக்க முறையில் வெள்ளை அரிசி சப்ளை நின்றவுடன் கைதிகளில் பெரும்பாலானோருக்கு இருந்த அல்சர் மாயமாக மறைந்தது.
யுத்தம் முடிந்து விடுதலை ஆன மருத்துவர் க்ளீவ் அல்சரை பற்றி ஆராய்வதை வாழ்நாள் லட்சியமாக கொன்டார். உலகெங்கும் இருந்த மருத்துவர்களுக்கு கடிதம் எழுதி அல்சர் நோயாளிகளின் உனவை பற்றிய தகவலை திரட்டினார். 1962ம் வருடம் அந்த கடிதங்கலை தொகுத்து நூலாக வெளியிட்டார். அதில் பக்கம், பக்கமாக மருத்துவர்கள் கூறியதன் சாராம்சம் இதுதான்: எங்கெங்கு எல்லாம் ரொட்டியும், மாவும், வெள்ளை அரிசியும் மக்களின் பிரதான உணவாக உள்ளதோ அங்கே எல்லாம் பெப்டிக் அல்சர் மக்களை படாதபாடு படுத்துகிறது என்பதும் இந்த உனவுகளை உண்ணாதவர்களுக்கு அல்சர் இல்லை என்பதும்.
ஆக க்ளீவ் தன் நூலில் கூறுவது இதைத்தான். உலகில் பலநாடுகளில் மக்களின் பாரம்பரிய உணவுகள் மேற்கத்தியமயமாதலின் தாக்கத்தால் மாவு, மில் அரிசி, சர்க்கரை முதலியவை சேர்க்கபட்டு உருமாற்றம் அடைந்துவிட்டன. (மில் வெள்ளை அரிசி நம் தொன்மை உணவான இட்லியை வெள்ளை நிறமாக்கியதை நினைவில் கொள்ளல்
கருத்தாக்கம்
நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment