Monday, November 19, 2018

மழை பற்றிய பழமொழிகள்...

மழை பற்றிய பழமொழிகள்...

-----------------------------------------
1. ஆனி ஆறில் இடி இடித்தால் ஆறு மாதத்திற்கு மழையில்லை.
2. ஆவணி ஆறில் இடி இடித்தால் நல்ல மழை
3. கோடை இடியும்,மாரி மின்னலும் மழை அதிகம்.
4. பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை.
5. மாரி இடியும், கோடை மின்னலும் மழையில்லை.
6. காலை மோடமும், கழுதை வாடையும், மாலைத்தென்றலும் மழையில்லை.
7. அடிவானம் கருக்கின் அப்பொழுதே மழை.
8. ஆகாயம் மணற்கொளித்திருந்தால் அப்போதே மழை.
9. ஆடி கீழ்க்காற்றும், ஆவணி மேல் காற்றும்  அடித்தால் சொப்பனத்திலும் மழையில்லை.
10. வட காற்று அடிக்க வந்தது மழையே.
11. அந்தி கிழக்கு,அதிகாலை மேற்கு கொரடு போட்டால் வரா மழை வரும்.
12. மேல் தலை வில்லு கீழ் தலை மழை, கீழ் தலை வில்லு மேல் தலை வெள்ளம்.
13. ஆனி மாதம் கொரடு போட்டால் அடுத்த மாதம் மழையில்லை.
14. காலைச்செவ்வானம்  கடுக மழை. அந்திச் செவ்வானம் அப்போதே மழை.
15. வானம் அதிர்ந்தால் மழை.
16. ஆடி அமாவாசை மழை பெய்தால் அடுத்த அமாவாசை வரை மழையில்லை.
17. ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை.
18. அஸ்வினி, கார்த்திகையில் இடி இடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழையில்லை.
19. துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை.
20. பரணி மழை தரணியெல்லாம் பெய்யும்.
21. அகல் வட்டம் பகல் மழை.
22. வடக்கே கருத்தால் மழை வரும்.
23. ஆடி , ஆவணி கீழ் காற்றும், ஐப்பசி மேல் காற்றும் அடித்தால் மழையில்லை.
24. வசாகத்தில் மழை பெய்யின் பயிர்களுக்கு நல்லது
25. கன்னிச்செவ்வாய் கடலும் வற்றும்.
26. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் மழை வரும்.
27. வட கிழக்கில் மின்னலடித்தால் மழை வரும்.
28. சந்திரன் கலங்கலாக காணப்பட்டால் மழை வரும்.

காக்கை குருவி எங்கள் சாதி..
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்...,


"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

No comments:

Post a Comment