Thursday, January 10, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS-2018 2018... தனி நபர் சாதனைகள் ஒரு பார்வை..- 03!! தனி நபர் சாதனை - 2018 - பகுதி - 3

###TNPSC_CURRENT_AFFAIRS-2018
2018... தனி நபர் சாதனைகள் ஒரு பார்வை..- 03!!
தனி நபர் சாதனை - 2018 - பகுதி - 3


2018-ல் தனி நபர் சாதனைகளை பலர் நிகழ்த்தி உள்ளனர். அவற்றைப் பற்றி காண்போம்.


நவம்பர் :

✒ எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் அருணிமா சின்ஹhவுக்கு பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதேபோல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உயரமான சிகரங்களின் உச்சியை அடைந்தும் அருணிமா சின்ஹh சாதனை படைத்துள்ளார்.

✒ அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான யோகாசனப் போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

டிசம்பர் :

✒ சென்னையைச் சேர்ந்த, நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி இளைஞர் ஸ்ரீராம் சீனிவாஸ், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின், 'ரோல் மாடல்" விருது பெற்றார். மாற்று திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் பங்கேற்று, 11 விருதுகள், நீச்சல் போட்டியில் 12 மற்றும் கடல் நீச்சல் போட்டிகளில் நான்கு விருதுகள் பெற்றுள்ளார்.

✒ உலக சாதனை முயற்சியாக விருதுநகரில், தவில் வித்வான் எம்.ராமசாமி (வயது 58) தொடர்ந்து 7 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்து சாதனை படைத்தார்.

✒ அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இவர் அளித்த 1,788 தீர்ப்புகள், சர்வதேச, தேசிய சட்ட பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

✒ குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, 16 வயதான நிலான்ஷி பட்டேல் என்ற மாணவி, உலகிலேயே மிக நீளமான முடி கொண்ட பெண் என்ற சாதனையை, படைத்துள்ளார். 5 அடி 7 அங்குல நீளம் கொண்ட அவரது தலைமுடிதான் உலகிலேயே மிக நீளமானது என கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.

✒ மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானியான, முருகன் என்ற இளைஞர், தண்ணீரில் இயங்கக்கூடிய பைக்கை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். தண்ணீர் மேல் ஓட்டும் சைக்கிள், கடலையை உரிக்க உதவும் நவீன கருவி உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்துக்கது.

✒ ஹைதராபாத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் சமன்யு பொத்துராஜு, ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். தமது தாய் லாவண்யா, சகோதரி உள்பட 5 பேருடன், ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையான, மவுண்ட் கொஸ்கியு+ஸ்கோவில் ஏறி சமன்யு சாதனை படைத்துள்ளார். 

✒ இயற்கை வளத்தை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும், உடுமலையில் ராஜா என்ற இளைஞர், 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

✒ தற்காப்புக் கலையில் 9 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார் மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற இளைஞர்.

✒ தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 8 வயது சிறுமி சம்யுக்தா, தலைமுடியால் காரை இழுத்து, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

✒ கேரள மாநிலத்தில் நடந்த எழுத்தறிவுத் தேர்வில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி, 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

✒ கோவாவின் பிரதேமேஷ் மௌலிங்கர், மிஸ்டர் சுப்பராநேஷனல் (தேசம் கடந்தவர்) 2018 என்ற பட்டத்தை, வென்ற முதல் ஆசியர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர், என்ற சாதனையைப் புரிந்துள்ளார். இவரைத் தொடர்ந்து மிஸ்டர் போலந்து இரண்டாமிடத்தையும் மிஸ்டர் பிரேசில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

✒ கேரளாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கி சாதனை படைத்துள்ளான். தற்போது 'டிரைநெட் சொல்யூசன்ஸ்" என்ற பெயரில் துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளான்.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 
அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

No comments:

Post a Comment