###TNPSC CURRENT AFFAIRS|தேர்தல் அதிகாரிகளை கண்காணிப்பதற்கு புதிய செயலி..!! - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 உலக வங்கி நிதி உதவியுடன், தமிழகத்தில் நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க கர்னெல் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
🍀 பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.
🍀 முஸ்லிம்களில், ′முத்தலாக்′ எனப்படும், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றால், சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டம், மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🍀 விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு, அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
🍀 தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு, புதிய செயலியை, சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
🍀 ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநிலத்தின் மக்களுக்கு இலவசமாக டுநுனு விளக்குகளை வழங்குவதற்காக 'ஆமா காரே டுநுனு" (Ama Ghare LED) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
🍀 Beti Bachao Beti padhao (பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம்) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டமாக திருவண்ணாமலை (தமிழகம்) தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
🍀 சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
🍀 கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது, தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment