###TNPSC CURRENT AFFAIRS-2018
எந்த நாடு தனது சொந்த மொழியில் செய்தி அனுப்பும் செயலியை தொடங்கியுள்ளது? - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 2018 ஆம் ஆண்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் (ளுறயஉhh ளுரசஎநமளாயn 2018 சுயமெiபெ) திட கழிவு மேலாண்மையில் சிறந்த நகரமாக 'ஹைதராபாத்" நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
🍀 International Rice Research Institute) என்னும், சர்வதேச அரிசி ஆராய்ச்சி கழகத்தின் தெற்காசிய பிராந்திய மையம், உத்திரபிரதேச மாநிலத்தின், வாரணாசி நகரில் ஏற்படுத்தப்பட்டது.
🍀 அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ததற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
🍀 கிராமப் புறங்களில், ′இன்டர்நெட்′ எனப்படும் இணைய பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், ′கேபிள் டிவி′ மூலம், விரைவில் இன்டர்நெட் சேவை அளிக்க, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், ′டிராய்′ எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் திட்டமிட்டுள்ளன.
🍀 போலி செய்திகள் மற்றும் குழந்தை ஆபாச படங்களை வெளியிடும், இணையதளங்கள் மற்றும் செயலிகள் மீதான தண்டனையை உயர்த்தும் நோக்கில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
🍀 உலகிலேயே முதல் முறையாக, உயர் அழுத்த மின்சாரத்தை மிக நீண்ட தொலைவுக்கு கொண்டு செல்லும் பணி, சீனாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
🍀 ஐ.நா உலக சுகாதார அமைப்பு சார்பில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 'காசநோய் இல்லாத தமிழகம் 2025" என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற்றது.
🍀 பாரதிதாசன் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்த, எம்.கிருஷ்ணனை மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
🍀 புதுச்சேரி ஜிப்மரின் புதிய இயக்குனராக, டாக்டர் ராகேஷ் அகர்வால், மத்திய சுகாதார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 வழக்குகளை டிஜிட்டல் வடிவத்தில் குறியாக்கம் செய்வதற்காக, டெல்லி போலீஸ் 'இ-மல்கானா" என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
🍀 மத்திய ஆசியாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாடான, துர்க்மெனிஸ்தான் நாடானது, தனது சொந்த மற்றும் முதல் துர்க்மென் மொழியில் செய்தி அனுப்பும் செயலியான டீணை டீயசனந என்பதை தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment