#TNPSC_CURRENT_AFFAIRS -2018
ஸ்மார்ட் போன் மூலம், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தும் திட்டம்..!!
TNPSC- 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 இந்திய கடலோரக் காவல் படையினர், சர் கிரீக் பகுதியைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு, இரண்டு புதிய மிதவை ஊர்திகளை (Hovercrafts) அனுப்பியுள்ளனர்.
🍀 மகாராஷ்டிராவின் மும்பைக்கு அருகில் உள்ள, யுரானின் கரான்ஜா கடற்படை நிலையத்தில், ′INHS' சந்தானி′ என்ற 10-வது கடற்படை மருத்துவமனை கப்பலை, இந்திய கடற்படையானது செயல் நிலைப்படுத்தியுள்ளது.
🍀 மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக, கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்காக, 'பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய்" சர்வதேச பள்ளியை மகாராஷ்டிரா மாநில அரசு தொடங்கியுள்ளது.
🍀 விண்வெளிக்கு 3 வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின், ′ககன்யான்′ திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
🍀 ஒடிசா மாநிலத்தில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, சோதனை அடிப்படையில், ஸ்மார்ட் போன் மூலம், ′ஆன்லைன்′ வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
🍀 இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் குழுவின் முதல் கூட்டமானது, ஈரானின் துறைமுக நகரமான சபாஹரில் நடைபெற்றது.
🍀 மறைந்த இசையமைப்பாளரான, லட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் மற்றும் பின்னணி பாடகர் உஷா தீமோத்தேயு ஆகியோருக்கு, முகமது ரஃபி விருது வழங்கப்பட்டது.
🍀 குவாலியரில் நடைபெற்ற தான்சென் இசைவிழாவில், மத்தியப் பிரதேச அரசானது, பிரபலமான சித்தார் இசைக் கலைஞரான மஞ்சுமேத்தாவிற்கு, 2018 ஆம் ஆண்டிற்கான தான்சென் சம்மன் விருது வழங்கி கௌரவித்தது.
🍀 ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு, 2018ஆம் ஆண்டுக்கான, தங்கப் பதக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
🍀 நடப்பு ஆண்டில் நேரடி அன்னிய முதலீட்டை முதல் முறையாக சீனாவை, இந்தியா முந்தி உள்ளது.
🍀 ′யர்னஸ்ட் அண்டு யங்′ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்திய பங்குச் சந்தைகள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 38 ஆயிரத்து 850 கோடி ரூபாய் திரட்டி, சர்வதேச பங்குச் சந்தைகளில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment