Wednesday, January 9, 2019

###TNPSC CURRENT AFFAIRS - 2019 | விருதுநகர் மாவட்டம், தேசிய அளவில் முதல் இடம்? | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

விருதுநகர் மாவட்டம், தேசிய அளவில் முதல் இடம்?
###TNPSC CURRENT  AFFAIRS - 2019

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 தோட்டா பாயாமல், உயிர்ப்பலி இன்றி கலவரத்தை கட்டுப்படுத்த, நவீன ரக துப்பாக்கியை கும்பகோணத்தைச் சேர்ந்த, என்ஜினீயர் சரவணன் புதிதாக கண்டுபிடித்துள்ளார்.

🍀 20 வயது நிரம்பிய புனேவைச் சேர்ந்த, வேதாங்கி குல்கர்னி என்பவர் மிதிவண்டி மூலம் வேகமாக உலகைச் சுற்றி வந்த, ஆசியப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.

🍀 நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு புத்துயிரூட்டும் புதிய திட்டத்தை, மத்திய அரசு தயாரித்துள்ளது.

🍀 ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தனது தூதரகத்தை, ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் திறந்துள்ளது.

🍀 தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், தமிழகத்தில், 29 பேருக்கு, அறிவியல் அறிஞர் விருதுகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

🍀 இந்திய போட்டி ஆணையமானது (ஊழஅpநவவைழைn ஊழஅஅளைளழைn ழக ஐனெயை-ஊஊஐ) முன்னாள் இந்திய பொறியியல் பணி அதிகாரியான, சங்கீதா வெர்மாவை தனது குழுவில் 4-வது உறுப்பினராக இணைப்பதாக அறிவித்துள்ளது.

🍀 மோரி (ஆழுசுஐ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய தவறான கண்ணோட்ட குறியீடு (ஆiளிநசஉநிவழைn ஐனெநஒ) எனும் பட்டியலில், இந்தியா 12வது இடம் பிடித்துள்ளது. முதல் 2 இடங்களை பிடித்துள்ள நாடுகள் - தாய்லாந்து, மெக்சிக்கோ நாடுகள் உள்ளன.

🍀 மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், ′நிடி ஆயோக்′ அமைப்பு, பின் தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தின் விருதுநகர், தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், 20வது இடத்தில் உள்ளது.

🍀 டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, இந்தியாவில் இணையதள இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 50 கோடி என்ற மைல்கல்லை கடந்து 56 கோடியாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment