###TNPSC_CURRENT_AFFAIRS-2019|
இன்றைய முக்கிய செய்திகள்
ஜனவரி 30
உலகச் செய்திகள்
பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி போதன் என்பவர் சிவில் நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.
ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. டி எப் 26 (DF 26) என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.
அமெரிக்காவில் உள்ள, பென்சில்வேனியா பல்கலையின் உயரிய கர்நாட் விருது, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை தொடங்குகிறது. முத்தலாக் தடை மசோதா, குடியுரிமை மசோதா ஆகியவற்றை இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் கொண்டுள்ளது.
ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வை, தலையணை உறை, டவல் உள்ளிட்டவற்றை காதி நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
மராட்டியத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார். இந்த பரிசு பெட்டகம் ஒன்றின் மதிப்பு ரூ.2000 ஆகும்.
மாவட்டச் செய்திகள்
வேலை நிறுத்தம் செய்து வந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 99 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பினர்.
அறிவாலயத்தையடுத்து கருணாநிதியின் இரண்டாவது பிரமாண்ட சிலை, அவருடைய குருகுலமான ஈரோட்டில் திறக்கப்பட இருக்கிறது. எட்டரை அடி உயரம், 750 கிலோ எடையில் வெண்கலத்தில் தயாராகியிருக்கும் பிரமாண்ட சிலையை, ஈரோடு முனிசிபல் காலணியில் கட்சிக்குச் சொந்தமான இடத்தில் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் ஈரான் அணியுடன் மோதிய ஜப்பான் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஒருநாள் போட்டியில் அதிக சதம் கண்ட ஜோடியில் ரோகித் சர்மா - விராட் கோலி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
No comments:
Post a Comment