###TNPSC GENERAL KNOWLEDGE |பொது அறிவு| மெரீனா கடற்கரை என்றாலே....!!
மெரீனா கடற்கரை!!
🌊 சென்னை என்றதும் பெரும்பாலரின் நினைவில் தோன்றுவது மெரீனா கடற்கரை தான். சென்னையின் முக்கிய அடையாளமாக இந்த மெரீனா கடற்கரை எனும் பிரம்மாண்ட கடற்கரைப்பகுதி வீற்றுள்ளது. வட முனையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்முனையில் அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை இந்த கடற்கரை நீண்டுள்ளது. சுமார் 12 கி.மீ. நீளமுள்ள மெரீனா உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட கடற்கரையாக புகழ்பெற்றுள்ளது. மேலும், 200 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.
மெரீனாவின் சிறப்பு :
🌊 புகழ் பெற்றோரின் நினைவிடங்கள், உருவச் சிலைகள், அரசு அலுவலகங்கள், கல்லு}ரிகள், கலங்கரை விளக்கம் போன்றவை இக்கடற்கரையின் மதிப்பை அதிகப்படுத்துகிறது.
🌊 சென்னை நகரின் நுரையீரல் என்று 'மெரீனா" அழைக்கப்படுகிறது.
🌊 இந்தியாவின் பெரிய ஓட்டமான 'சென்னை மாரத்தான்" இங்கு நடைபெறுகிறது.
🌊 சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போன்ற விழாக் காலங்களில் அரசுத் துறைகளின் அணிவகுப்பு இங்கு நடைபெறுகிறது.
🌊 தென்னிந்தியாவின் கலச்சார நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் இக்கடற்கரை இருப்பது கூடுதல் சிறப்பு.
🌊 நகர மக்களுக்கும், சென்னையை சுற்றிப் பார்க்க வரும் பிற மக்களுக்கும் இக்கடற்கரை ஓர் வேடந்தாங்கல்.
🌊 அதிகாலையில் மெரீனாவில் நடக்கிறவர்கள், ஓடுகிறவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், யோகா மற்றும் நடனம் கற்று கொள்பவர்கள் என பலவகைப்பட்டவர்களை காண முடியும். அதுவும் குதிரைகளில் அமர்ந்த படி வலம் வருவது தனி சுகம் தான்.
🌊 கடல் நீரில் கால் நனைத்துவிட்டு பொறித்த மீன் துண்டையும், துரித உணவகங்களையும், கடல் காற்றுடன் சுவைத்து மகிழலாம். மேலும், பயணிகள் இங்கு அமைந்திருக்கும் நீச்சல் குளத்துக்கும் விஜயம் செய்யலாம்.
🌊 பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்தபடி காதலிக்கும் காதலர்களை தமிழ்நாட்டிலேயே இங்கே மட்டும் தான் காண முடியும்.
🌊 இப்படியாக ஆயிரக்கணக்கான வியாபார குடும்பங்களை வாழவைத்து கொண்டிருக்கும் இதே மெரீனா தான் குழந்தை தொழிலாளர்களையும் ஊக்குவிக்க காரணமாகி விடுகிறது.
🌊 குழந்தைகள் மட்டுமல்ல இளம்வயதினருக்கும் இது ஒரு விளையாட்டு திடலாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கள் வாழ்க்கையின் சந்தோஷமான நாட்களையும், வயது முதிர்ந்தோர் பழைய நினைவுகளையும் மெரீனாவில் தான் அனுபவிக்கின்றனர்.
🌊 இப்படி இக்கடற்கரை ஓர் அற்புதமான இடமாக திகழ்கிறது. தனியாக இங்கு வந்து அமர்ந்தால் வாழ்க்கையில் ஏதோ ஓர் நிம்மதியை இந்த கடலும், மணலும், கடற்கரையும் நமக்கு கொடுக்கும்.
🌊 ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடல், மறுபுறம் கண்ணைப் பறிக்கும் கலைநயமிக்க கட்டடங்கள் என இயற்கையின் பிரம்மாண்டத்தையும், உழைப்பின் உன்னதத்தையும் ஒருசேர நினைவு+ட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருக்கிறது மெரீனா கடற்கரை.
போக்குவரத்து :
🚌 மெரீனா கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன.
இது போன்ற பல தகவல்களை தெரிந்துக் கொள்ள
இங்கே கிளிக் செய்யவும்..!
No comments:
Post a Comment