கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்க புதிய இணையதளம்...!!!
-2019
###TNPSC CURRENT AFFAIRS -18-19
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதி நிறுவனமான ஜெய்கா, முதல்கட்டமாக ரூ.4,770 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது.
🍀 குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான, 3 நாள் மாநாட்டில், கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்க புதிய இணையதளத்தினை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
🍀 அசாம் - அருணாச்சல பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள, முதல் பயணியர் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
🍀 கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில், ரியல்மாட்ரிட் அணி 4-வது முறையாக, கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
🍀 நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, 'பிரணாப் குமார் தாஸ்", மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரிக்கான வாரியத்தின் (CBIC - Central Board of Indirect Taxes and Customs) தலைவராக நியமித்துள்ளது.
🍀 ஹைதராபாத்தை சேர்ந்த, சமன்யு பொத்துராஜு என்ற 8 வயது சிறுவன், ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
🍀 கிரு;ணகிரியில் இயங்கி வரும், தேவி வரதாலயா நாட்டியப் பள்ளி சார்பில், அரசு பள்ளி மாணவியர் ஒரு மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர்.
🍀 அகன்ற இணைய சேவைக்கான, முதல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது.
🍀 அணு ஆயுதங்களை சுமந்து சென்று, நீண்ட துhரம் பாய்ந்து, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும், திறன் உடைய, அக்னி - 4 ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலத்தில், வெற்றிகரமாக நடந்தது.
🍀 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ஆம் தேதி, தேசிய விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment