Thursday, January 3, 2019

###TNPSC CURRENT AFFAIRS-2018 2018 விவசாயிகள் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம் - பாகம்-02 !!

###TNPSC CURRENT AFFAIRS-2018



2018 விவசாயிகள் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம் - பாகம்-02 !!


2018-ல் விவசாயிகள் கடந்து வந்த பாதையைப் பற்றியும், விவசாயத் துறையில் சாதித்த விஷயங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.

வேளாண் விருதை பெற்ற பேராசிரியர் சுவாமிநாதன் :

இந்திய விவசாயத்துறையில் பசுமை புரட்சிகள் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்த வேளாண்துறை வல்லுனர் எம்.எஸ்.சுவாமிநாதனின் அளப்பரிய சேவைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

எம்.எஸ்.சுவாமிநாதனின் உலகளாவிய பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக பொருளாதார 
சூழலியலின் தந்தை என ஐ.நா புகழாரம் சூட்டியுள்ளதாக இந்திய உணவு மற்றும் வேளாண் சபை பெருமிதம் தெரிவித்துள்ளது.

புதிய கால்நடை இனம் :

நடப்பாண்டுக்கான புதிய கால்நடை இன அங்கீகார கூட்டம் அரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் ஈரோடு மாவட்டம், பர்கூர் மலை கிராமங்களில் வளர்க்கப்படும் பர்கூர் மலை எருமைகளை, புதிய வகை எருமையாக அங்கீகரித்தனர். மேலும், உலக அளவில் பர்கூர் எருமையின் குறியீடு எண்ணையும் 01015 என்று அறிவித்தனர்.

டெல்லி விவசாயிகள் பேரணி :

வேளாண் தொழிலில் இருப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கடனில் இருந்து விடுதலை செய்வதை உறுதி செய்யும் சிறப்புச் சட்டம் ஆகிவற்றை நிறைவேற்றுவதற்காக இப்பேரணி நடைபெற்றது.

மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை என்று அறியப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் அறிக்கையை விவாதித்து அதன் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காகவும் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாய விளை பொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும் மற்றும் பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

எட்டு வழிச்சாலை :

சேலம்-சென்னை இடையில் பசுமை வழிசாலை அமைக்கும் திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்டம் ஆகியவற்றால் விவசாய நிலங்கள் அதிகமாக அழிக்கப்படுவதாலும், மரங்கள் அனைத்தும் வெட்டப்படுவதாலும் இதைத் தடுப்பதற்காக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயலால் பாதிப்பு :

கஜா புயல் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன. கஜா புயலால் ஏராளமான மரங்கள், விவசாய பயிர்கள், வீடுகள், கால்நடைகள் சேதமடைந்து மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


No comments:

Post a Comment