###TNPSC_GENERAL_TAMIL|
8 ஆம் வகுப்பு - முதல் பருவம் புத்தக வினா விடைகள்|
8ஆம் வகுப்பு - முதல் பருவம்|
பொதுத்தமிழ்
1. முத்தே பவளமே மொய்த்த ———— அடுத்து வரும் சொற்றொடரைக் கூறுக. - பசும் பொற்சுடரே
2. கேட்டதனை வழங்கும் மரம் எது? - கற்பக மரம்
3. பேச்சுக்கலையில் சிறந்து விளங்கிய தமிழறிஞர் யார்? - அண்ணா
4. சிறுகதைக்கு உரமூட்டியவர் யார்? - புதுமைப்பித்தன்
5. ′புத்துயிரூட்டி′ - பிரித்து எழுதுக - புத்துயிர் + ஊட்டி!
6. ′சதுரகராதி′ - பிரித்து எழுதுக - சதுர் + அகராதி
7. கீழ்க்காணும் தொடர்களை செய்வினையாக்குக.
அ) ஓவியம் மாறனால் வரையப்பட்டது. - மாறன் ஓவியத்தை வரைந்தான்.
ஆ) மாலை மல்லிகாவினால் தொடுக்கப்பட்டது. - மல்லிகா மாலையைத் தொடுத்தாள்.
இ) பாரி கபிலரால் போற்றப்பட்டார். - கபிலர் பாரியைப் போற்றினார்.
8. கீழ்க்காணும் தொடர்கள் எவ்வகையைச் சார்ந்தவை?
அ) தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை. - செய்தித்தொடர்
ஆ) இந்தச்செயலைச் செய்தது யார்? - வினாத்தொடர்
இ) இளமையில் கல் - கட்டளைத்தொடர்
தமிழின் இனிமை! - உணர்ச்சித்தொடர்
9. கீழ்க்காணும் தொடரை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) உழைத்துப் பிழை (செய்தித் தொடராக்குக) - விடை: உழைத்துப் பிழைக்க வேண்டும்.
ஆ) மாமல்லபுரத்து சிற்பங்கள் மிகவும் அழகாக உள்ளன. (உணர்ச்சித் தொடராக்குக) - விடை: மாமல்லபுரத்து சிற்பங்கள் என்னே அழகு!
இ) மணிமொழி நன்கு பாடினாள். (பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடராக்குக) - விடை: மணிமொழி நன்கு பாடாமல் இல்லை.
- விடை: கமலா பரிசு பெற்றாளா?
உ) நினைவாற்றலை வளர்த்துக் கொள்க. (கட்டளைத் தொடராக்குக) - விடை: நினைவாற்றலை வளர்த்துக் கொள்.
No comments:
Post a Comment