TNPSC - TAMIL
9ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்ட வினாக்கள்...!!
9ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம்
முதல் பருவம் - பொதுத்தமிழ்
தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்
1) கடல் - அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு
2) கண்மாய் - பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்
3) குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
4) குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
5) குமிழிஊற்று - அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று
6) கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
7) கேணி - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
8) புனற்குளம் - நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
9) பு+ட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
10) அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைந்தப்பட்ட நீர் அரண்
11) அருவி - மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது
12) ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
13) ஆறு - இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு
14) இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
15) உறைக்கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
16) ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
17) ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது
18) ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
19) கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
No comments:
Post a Comment