ஸ்டெர்லைட் விவகாரம் போராட்டத்தில் குதிக்க மக்கள் கூட்டமைப்பு முடிவு!!!
🌀ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என்று தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
🌀 உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர்.
🌀 அதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதியை ரத்து செய்தது.
🌀 மேலும், தமிழகஅரசு கடந்த மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தது.
🌀 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தும், நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆலையை திறப்பது குறித்து விசாரணை மேற்கொண்டது. அந்த குழு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அறிக்கை கொடுத்துள்ளது.
🌀 இது தூத்துக்குடி பகுதி மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
🌀 தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்த ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும் மக்கள் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டினார்.ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஜனநாயக முறையில் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
🌀மேலும், 3 முக்கிய கோரிக்கைகளையும் தெரிவித்து உள்ளனர்:
🌀 1. தமிழக அமைச்சரவை கூடி, “ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது” என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
🌀 2. ஆலைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கட்டிடம், தீயணைப்பு, தொழிற்சாலை உரிமங்கள் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
🌀 இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்துவோம். அது ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் முழுவதும் பரவும் என்று அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment