TNPSC Tamil - தூய்மை இந்தியா திட்டத் தூதுவராக 7 வயது சிறுமி...- 2018
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
💥 இந்தியாவில் முதல் முறையாக செய்தியாளர்கள் இல்லாமல், இந்தியாவின் அனைத்து விதமான செய்திகளை வழங்கும், புதிய முயற்சியை ZEE நெட்வொர்க் மேற்கொண்டுள்ளது.
💥 தேசிய கால்நடைகள் திட்டத்தின் கீழ், (National Livestock Mission), மத்திய அரசின் பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு திட்டங்களுக்கான, மானியங்களை நேரடியாக பயனர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக, 'ENSURE" என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
💥 நாகலாந்து மாநில அரசானது அம்மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில், 'சுற்றுலா காவல் துறை" என்னும் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
💥 டைம்ஸ் பத்திரிகையின், இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில், கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
💥 ஆஸ்திரேலியாவில் 102 வயதான இர்னே ஓஷியா என்ற மூதாட்டி, ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
💥 நிதி நடவடிக்கைக்கான சர்வதேச அமைப்பில் (Financial Action Task Force - FATF) 38வது உறுப்பினராக இஸ்ரேல் நாடு இணைந்துள்ளது.
💥 பயணத்தின் போது, பெட்டிகளை சுத்தம் செய்து, தூய்மையாக வைத்துக்கொள்ள, ′கோச் மித்ரா′ என்ற திட்டம், தெற்கு ரயில்வேயில், 102 ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
💥 குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 'டிஜிட்டல் சகாப்தத்தில் குழந்தைகள் மீது பாலியல் சுரண்டல் (Sexual Exploitation of Children in Digital Era)" என்ற முதல் சர்வதேச மாநாடு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
💥 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, 2வது முறையாக, சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றார்.
💥 வேலு}ர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத் தூதுவராக, 7 வயது சிறுமி 'ஹனிஃபா ஜாரா" என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
💥 கிளாஸ்கோவைச் சேர்ந்த கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான, சார்லோட் ப்ரோட்கர், 2018 ஆம் ஆண்டிற்கான டர்னர் விருதினை வென்றார்.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment