###TNPSC CURRENT AFFAIRS|
இனி இதற்கு ஆதார் தேவையில்லை....! |
இன்றைய முக்கியச் செய்திகள்டிசம்பர் 18
உலகச் செய்திகள்
இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஏ உடன் 'ஜி.எஸ்.எல்.வி."-எப்11 ராக்கெட் நாளை (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 'கவுண்ட்டவுன்" இன்று பகல் தொடங்குகிறது.
மெக்சிக்கோ நாட்டில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. ஏழை-எளிய மக்களின் சிறார்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்கு நிதி திரட்டும் வகையில், மாண்டெரெரீ நகரில், இந்த ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
மாநிலச் செய்திகள்
செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் கட்டாயமில்லை என்ற சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமல்ல என்று உத்தரவிட்டுள்ளது.
பெய்ட்டி புயல் கரையை கடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மும்பையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற பின்னர், பிரபல கார்டூனிஸ்ட் சுமு லெக்ஷ்மண் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறார்.
கூகுள் மேப்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லியில் மட்டும் பொதுப் போக்குவரத்து வாய்ப்புகளுக்கான பட்டியலில் ஆட்டோ ரிக்ஷாவையும் இணைத்துள்ளது.
தனிநபர்களின் மொத்த டிஜிட்டல் ஆவணங்களையும் திருடி, வெறும் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு சைபர் குற்றவாளிகள் விற்பனை செய்ய வாய்ப்பிருப்பதாக, காஸ்பர்ஸ்கை என்ற கணினி வைரஸ் தடுப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் முத்தலாக் முறைக்கு எதிராக புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மதுரை தோப்பு+ரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
விளையாட்டுச் செய்திகள்
12வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பு+ரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்த பிரித்வி ஷா ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அழைக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து பயனடையுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
https://www.kavimalaravan.blogspot.com
No comments:
Post a Comment