Thursday, December 27, 2018

###TNPSC -CURRENT AFFAIRS -18 2018 உலகப் பார்வை... ஆச்சர்யங்களும், அதிசயங்களும்..!!

டந்து வந்த 2018.. உலக நிகழ்வுகள்.. ஆச்சர்யமும், அதிர்ச்சியும், அதிசயமும்...!!


###TNPSC -CURRENT AFFAIRS -18
2018 உலகப் பார்வை... ஆச்சர்யங்களும், அதிசயங்களும்..!!



2018 முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளது. இந்த 2018ல் உணர்ச்சிப்பூர்வமான பல நிகழ்வுகளை கடந்து வந்துள்ளோம். நம் மனதில் பதிந்து சென்ற நிகழ்வுகளை இன்று நினைவு கூறுவோம்.

உலகின் மிக நீண்ட கடல் பாலம்
கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட ஹங்கொங்-ஜுஹாய்-மாகு கடல் பாலம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-ஆல் அதிகாரப்பூர்வமாக 2018ல் திறந்து வைக்கப்பட்டது.

சவுதி பெண்களுக்கு
கார் ஓட்ட அனுமதி, சொந்தமாக தொழில் தொடங்க அனுமதி, இணை விமானிகள், விமான ஊழியர்கள் போன்ற துறைகளில் பெண்களுக்கு உரிமைகளை வழங்கி சவுதி மன்னர் சல்மானும் இளவரசர் முகமது பின் சல்மானும் உத்தரவு விதித்தனர்.

இந்தோனேஷியா
அக்டோபர் 29ஆம் தேதி இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவு நோக்கிப் புறப்பட்ட ஜெடி-610 என்ற விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

டிசம்பர் 23ஆம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா, ஜாவீ தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானோர் எண்ணிகை 200-யை தாண்டியது.

குகையில் நடந்த சாகசம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையான தாய்லாந்து நாட்டில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் வைல்டு போர் எனும் கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்களும், சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங்கும் கடந்த ஜூலை 23ம் தேதி மாட்டிக் கொண்டனர். இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி இவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் இவர்கள் மூன்று பிரிவாக மீட்கப்பட்டனர்.

இலங்கை அரசியல்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அதிபர் சிறிசேனாவுக்கு இடையே நடந்த கருத்து மோதலில், இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா பதவி நீக்கம் செய்தார். இதனை தொடர்ந்து பல எதிர்ப்புக்கு இடையே புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமித்து, நாடாளுமன்றத்தையும் முடக்கினார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுபடி நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் பெரும்பான்மையை நிரூபித்தார். இதனை தொடர்ந்து ராஜபக்சே பதவி விலகி ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானார்.

பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவரும், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் பிரதமராக ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார்.

கிம்-மூன் சந்திப்பு

அமெரிக்காவுடன் ஏற்பட்ட சமாதானத்துக்குப் பிறகு இனி அணு ஆயுத சோதனைகளை நடத்தப் போவதில்லை என்று அறிவித்த வடகொரிய அதிபர் கிம், சுமார் 50 வருடங்களைக் கடந்த கொரிய போருக்குப் பிறகு தென் கொரிய எல்லைக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற வரலாற்று நிகழ்வு நடந்தது.

மேலும் உலகப் பார்வையில் இந்தியா உட்பட பல நாடுகளில் நடந்த நிகழ்வுகளை நாளைய பகுதியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment