Wednesday, December 26, 2018

வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு...! இன்றைய முக்கியச் செய்திகள் டிசம்பர் 25

வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் : 
தமிழக அரசு அறிவிப்பு...!
இன்றைய முக்கியச் செய்திகள்
டிசம்பர் 25


உலகச் செய்திகள்
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் உட்பட பல பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக நீர் பற்றாக்குறை நிலவுகிறது. தினமும் நீருக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மாநிலச் செய்திகள்

அசாம்-அருணாச்சல மாநிலங்களை இணைக்கும் மிகப் பெரிய சாலை-ரயில் போக்குவரத்து பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். நாட்டின் ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அசாம் மாநிலம் தில்புருகர்-அருணாச்சலம் மாநிலம் இட்னா நகரை இணைக்கக்கூடிய போகிபீல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான புதிய சீருடைகளை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

உள்நோக்கத்தொடு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் அடுத்தடுத்து பொது நல வழக்குகள் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற புறம்போக்கு நிலங்களை தவிர்த்து, பிற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கு வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூவாயிரம் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேபூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் பிரமாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில் கேக் விற்பனையும் சு+டுபிடித்துள்ளது.

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில்களில் கற்பு+ரம் மற்றும் விளக்கேற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பாம்பன் பாலத்திற்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 
மாவட்டச் செய்திகள்
கன்னியாகுமரிக்கு தெற்கு குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) தென்மாவட்டங்களில் பரவலாக ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. 
விளையாட்டுச் செய்திகள் 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் கே.எல் ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளனர்.

லா லிகாவின் தலைசிறந்த கால்பந்து அணியான பார்சிலோனாவிடம் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை பெற்றுள்ளார்.

நியூஸிலாந்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இடம்பிடித்துள்ளார்.


No comments:

Post a Comment