###TNPSC CURRENT AFFAIRS - 2018
2018... தமிழக மாவட்டங்கள் ஒரு பார்வை..!!
தமிழகத்தில் மிகப்பெரிய துயரம் இதுவாகத்தான் இருக்கும்..!!
கரூர்
புதுடெல்லியில், மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும் 'நீர் மேலாண்மையில் திறம்மிக்க அலகு" என்ற சிறப்பு விருதானது கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு வழங்கப்பட்டது.
நாமக்கல்
ஜூன் 21, 2018 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது20) சர்வதேச யோகா போட்டியில் பலமுறை தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் யோகா பெடரேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பின், தமிழக கிளை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உலக சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வண்ணத்துப்பு+ச்சிகள் கணக்கெடுப்பில் 198 வகை வண்ணத்துப்பு+ச்சி இருப்பது அக்டோபர் 16, 2018-ல் பதிவு செய்யப்பட்டது.
திருப்பூர்
ஆகஸ்ட் 15, 2018 அன்று சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் 2018ம் ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக திருப்பு+ர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
திண்டுக்கல்
மார்ச் 20, 2018 அன்று பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லு}ரி மாணவர்கள் கொசுக்களை விரட்டும் ஆடை மற்றும் ஆளில்லாமல் இயங்கும் 'ரோபோ கிரேன்" தயாரித்துள்ளனர். மெக்கானிக்கல் துறை சார்பில், விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஒருசக்கர, மூன்றுசக்கர நீர்தௌpப்பான்கள், செயின் இல்லாமல் ஓடும் சைக்கிள் தயாரித்துள்ளனர்.
மதுரை
பிப்ரவரி 18, 2018 அன்று உலக சாதனை முயற்சியாக மதுரை அமெரிக்கன் கல்லு}ரியில் 18 நிமிட பாடலுக்கு 699 கலைஞர்கள் பங்கேற்ற ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. கலாகேந்திரா கலை பண்பாட்டு மையம் சார்பில் 'ஹைரேஞ்ச் புக் ஆப் ரிக்கார்டு" முயற்சியாக 6 முதல் 60 வயது வரை உள்ள கலைஞர்கள் பங்கேற்றனர்.
டிசம்பர் 18, 2018 அன்று மதுரை தோப்பு+ரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் வருகையின் போதான மின்னணு நுழைவு இசைவு வசதி (ஏளைய-விசா) அக்டோபர் 18, 2018 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வசதியை பெறும் தமிழ்நாட்டின் நான்காவது மற்றும் ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் 26வது விமான நிலையம் இதுவாகும்.
சிவகங்கை
திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக சிவகங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் அகழாய்வில் பழங்கால அடுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேனி
2018ஆம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 8வது சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் டிசம்பர் 21, 2018 அன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
மே 22, 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முற்றுகை போராட்டத்தின் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சு+ட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது 2018ன் மிகப்பெரிய துயரமாகும்.
நெல்லை
தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை இன்றி அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட அரசு தொடக்கப்பள்ளியை வாட்ஸ்அப் குரூப் மூலம் இளைஞர்கள் மீட்டெடுத்த நிகழ்வு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நிகழ்ந்தது.
No comments:
Post a Comment