Saturday, December 22, 2018

சுழியன்||இராமானுசம் ###இராமானுசம் கவிதை || ##ராமானுசம்_கவிதை


சுழின்||இராமானுசம்
###இராமானுசம் கவிதை
##ராமானுசம்_கவிதை

கணிதமேதையின் 131வது பிறந்தநாள்


சுழின்
நேற்றைய தேர்வில் நான் வாங்கியது சுழி மதிப்பெண்
சுழி சுழி சுழியென சுழிக்கும் சில  சுழிமுகங்களின்
விழிபிதுங்க கேட்டவன் நீ

கணித பேதைகளின் சிலநாள் விரட்ட
கணிதமேதையின் நாள் தேவைப்படுகிறது...
காசுக்கு காரித்துப்பும் காரியவான்கள் சிலரிருக்க 
காசுதுப்பும் கைங்கரியங்கள் உன்னாலே...

பிதாகரஸின் தேற்றம் துவங்கி ரங்கிக்குட்டா வரை
யார்யாரையோ படிக்கிறோம்...
பார்போற்றும் உம்மை படிக்கா பாவியாகிவிட்டோம்...

உந்தன் ஆவிதுடித்த நாளில்கூட 
கணிதம் படித்த பாவி நீ!!!
புனித மதம் காக்க புறப்பட்டவனா நீ...?
மனித மனம் காக்க புரப்பட்டவனும்... நீ
கணித கணமறிந்து பிணமானவனும் நீ...

உணையறிந்த உலகம் சிலை வைக்கிறது...
உணையறியும் சிலருக்கு மனம் பதைக்கிறது...

அதோ அங்கே!
ஆம் அங்குதான் 
இப்படி ஒரு கணித பைத்தியமா என்றா கேட்கிறீர்...
சிலர் கணிதம் உண்ணை ஆட்டுவித்ததாக எண்ணலாம்...
இல்லை இல்லை
நீதான் கணிதத்தை ஆட்டுவித்தாய்...
ஆட்டுவிக்கிறாய், ஆட்டுவிப்பாய்....

உண்ணை நாங்கள் என்னவென்று வாழ்த்த!!!
33 வயசில் இறந்த சின்னப்பையனா நீ..
உண்ணை நாங்கள் என்ன சொல்லி வாழ்த்த......
உண்ணை நாங்கள் என்ன சொல்லி வாழ்த்த......
உண்ணை நாங்கள் என்ன சொல்லி வாழ்த்த......




த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
9095903089

No comments:

Post a Comment