காதில் பூச்சி நுழைந்தால் எப்படி வெளியே எடுப்பது
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இதற்காக பெரும்பாலானவர்கள் காதினுல் தண்ணீரை ஊற்றுவார்கள். இது தவறான முறையாகும்.
தண்ணீரை காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உள்ளது. ஆகவே பூச்சி அதிகத் துடிபக்க ஆரம்பிக்கும். அதனால் கவலையும், பயமும் அதிகமாகும்.
எனவே காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ தான் ஊற்ற வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து வெளியே வந்து விடும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே எச்சரிக்கையுடன் செயல்படவும். நன்றி.
No comments:
Post a Comment