பாபா ஆம்தே
யார் இந்த பாபா ஆம்தே? கூகுள் தன் முகப்பு பக்கத்தில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய ஆளுமையா? என்றால் ஆம் என்றுதான் செல்ல வேண்டும் . அவரைப் பற்றிய சில செய்திகளை இங்கு தொகுத்துள்ளேன்.
பிறப்பு 26 டிசம்பர், 1914 இங்கன்காட், மகாராட்டிரம், பிரித்தானிய இந்தியா
தொழு நோயாளிகள் நலனுக்காக, மறுவாழ்வுக்காக தனது வாழ்வையே
அர்ப்பணித்தவர் ஆம்தே. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஆம்தேயின் முழுப் பெயர்
முரளீதர் தேவிதாஸ் ஆம்தே. வழக்கறிஞரான இவர் இளமை பருவத்திலேயே சமூகத் தொண்டில்
ஆர்வம் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
1914 டிசம்பர் 26 அன்று மகாராஷ்டிரத்தின் மேற்கு பகுதியில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் ஆம்தே. அவருடைய தந்தையார் தேவிதாஸ் பெரும் செல்வந்தர், நிலக்கிழார், அரசில் உயர் பதவி வகித்தவர். பதினான்கு வயதில் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர். தனியாக மோட்டார் வண்டி ஒட்டக்கூடிய வயதில் அவருக்கென்று ஒரு சிங்கர் ஸ்போர்ட்ஸ் கார் கொடுக்கப்பட்டது, அதன் இருக்கைகளை சிறுத்தைத் தோல் அலங்கரித்தது.
மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்த ஆம்தே நாக்பூர்
பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து முடித்தவுடனேயே ஏழை மக்களுக்காக வழக்குகளில்
இலவசமாக வாதாட ஆரம்பித்தார்.
தொழுநோயாளிகள் படும் இன்னல்கள் கண்டு கலங்கிய ஆம்தே அவர்களுக்காக
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் ஆசிரமம் அமைத்தார். அவரை தொழுநோயாளிகள் பாபா
ஆம்தே என அன்புடன் அழைக்க ஆரம்பித்தனர்.
ஆசிரமத்தில் தொழு நோயாளிகளுக்காக இலவசமாக மருத்துவமனையையும் அமைத்து
அவர்களுக்கு முழு நேரமும் சேவை செய்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தொடர்ந்து
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு வந்தார். இந் நிலையில் இன்று
பிப்ரவரி 9 2009 அதிகாலை ஆசிரமத்திலேயே இயற்கை எய்தினார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். உலக அளவில் பல விருதுகளை வென்றவர் பாபா
என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம வளர்ச்சிக்கு எதிரான, வெறும் தொழில்துறைகள் சார்ந்த
வளர்ச்சியை கடுமையாக எதிர்த்தவர் பாபா. குஜராத்தின் சர்தார் சரோவர் அணைத் திட்டம்
உள்ளிட்ட இயற்கையை சீர்குலைக்கும் திட்டங்களை கடுமையாக எதிர்த்தவர் ஆம்தே.
முரளிதர் தேவதாசு ஆம்தே
வழக்கறிஞரான இவர், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் போராட்டத் தலைவர்களுக்குச் சார்பாக வாதாடினார். காந்தியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி இருந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாக வாழ்ந்தார். தாம் ஒரு தலைவராக இருப்பதை விட, சிறு சிக்கலைத் தீர்க்கக்கூடிய ஒரு பொறியாளனாக இருக்கவே விரும்புவதாகக் கூறினார். காந்தியவாதியான இவர், காந்தியைப் போல் அல்லாமல் இறை மறுப்பாளராக இருந்தார்.
நான் எனது ஆன்மாவைத் தேடினேன்,என்னால் ஆன்மாவைக் காணமுடியவில்லை.நான் எனது இறைவனைத் தேடினேன்,எனது இறை என்னிடம் இருந்து தப்பிச்சென்றது.நான் எனது சகோதர்களைத் தேடினேன், அம்மூவரையும் நான் கண்டுகொண்டேன்.
வக்கீலுக்குப் படித்து, வார்தாவில் அந்தத் தொழிலில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் மஹாத்மா காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டு, காந்தியவாதியாக மாறினார்.
சுதந்தரத்துக்குப் பிறகு, வாரோரா நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நகராட்சி “எடுப்பு கக்கூஸ்” சுத்திகரிப்பு ஊழியர்கள் சம்பளம் உயர்த்தச் சொல்லிக் கேட்டனர். முரளி ஆம்டே நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். அவர்கள், கக்கூஸ் சுத்திகரிப்பது என்பது மிகவும் கடுமையான வேலை, யாராலும் இதனைச் செய்யமுடியாது என்றனர். “ஏன்? நான் செய்து காட்டுகிறேன்” என்று இறங்கினார் ஆம்டே. முதல் நாள், முதல் கக்கூஸை சுத்தம் செய்வதற்குள் உயிர் போய்விட்டது. அப்போதுதான் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எந்த மோசமான நிலையில் வேலையில் ஈடுபடுகின்றனர்
என்பதைப் புரிந்துகொண்டார். அடுத்த 9 மாதங்கள், நாளைக்கு 40 கக்கூஸ் சுத்தம் செய்யும் வேலையை, பிற சுத்திகரிப்புத் தொழிலாளர்களுடன் சேர்ந்து செய்தார்.
ஆம்டே, சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் யூனியனின் தலைவராகவும் இருந்தார். எனவே “தீண்டத்தகாதவர்கள்” வீடுகளுக்குப் போய்வந்தார். இதனால் அவரது பெற்றோரும் கிராமத்தவரும் அவரிடம் இருந்து விலகியே இருந்தனர்.
ஆம்டே, இந்தியாவில் நிலவிவந்த கடுமையான சாதிப் பிரிவினைகளை எதிர்க்கத் தொடங்கியது அப்போதுதான். தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு டீக்கடைக்கு வருவார். அவர்களுக்கு தனி டீ கிளாஸ் கொடுக்கப்பட்டால் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பார். இந்து மதத்தின் மீதான நம்பிக்கை அவருக்குப் போக ஆரம்பித்ததும் அப்போதாகத்தான் இருக்கவேண்டும். அப்போது நாத்திகராக மாறிய ஆம்டே தன் உயிர் போகும் வரையில் நாத்திகராகவே இருந்திருக்கிறார்.
இந்து மதத்திலிருந்து விலகினாலும், இந்து என்ற பெயர்கொண்ட பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். அதுவும் சுவாரசியமான கதை. ஒரு மாதிரியான சாமியாராக, தாடி மீசையுடன், கதராடையுடன் அவர் அலைந்துகொண்டிருந்தார். திருமணமே செய்துகொள்ளமாட்டேன் என்ற உறுதியில் இருந்தார். ஆனால் உறவினர் திருமணம் ஒன்றில் இந்து என்ற தூரத்து உறவுப் பெண்ணைப் பார்த்தார். வயது மிகவும் குறைந்த பெண் அவர். இருந்தாலும் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்பட்டது. காதல் கடிதங்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். பெற்றோர்களின் எதிர்ப்பைமீறி அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தது.
கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை பிறந்தபிறகுதான் ஆம்டேக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவம் ஒன்று ஏற்பட்டது.
ஒரு நாள் கொட்டும் மழையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆம்டே, தெருவில் ஒரு தொழுநோய் ரோகியைக் கண்டார். கை, கால் விரல்கள், மூக்கு, காது ஆகியவை இல்லாத, உடல் அழுகி நாற்றம் எடுக்கும், விரைவில் உயிர் பிரியப்போகும் ஒரு மாமிச மூட்டையாகத் தெருவில் கிடந்த ஓர் உருவத்தை நடைபாதையில் கண்டார். முதலில் அருவெறுப்பு. கிட்டத்தட்ட வாந்தியே வர, அங்கிருந்து ஓடி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அன்று இரவு முழுதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சக மனிதன், நோயால் திண்டாடும் ஒருவன், என் தனக்கு அருவெறுப்பைத் தரவேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருந்தார். அடுத்த நாள், வீட்டிலிருந்து ஒரு போர்வையைக் கொண்டுபோய் அந்த சாகும் உருவத்தின்மீது போர்த்தி, அதன் பக்கத்திலேயே இருந்தார். உடலின் புண்களைத் துடைத்து மருந்திட்டு பார்த்துக்கொண்டார். இரண்டு மூன்று நாள்களில் அந்தத் தொழுநோயாளி இறந்துபோனார். ஆனால் தொழுநோயாளிகளுக்கு ஒரு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற புத்துணர்ச்சி ஆம்டேக்குள் பிறந்தது.
தொழுநோயாளிகளுக்கு மருந்துகொடுக்க டாக்டர்கள், நர்ஸ்கள் யாருக்கும் விரும்ப்பம் இல்லை. அது தொற்றுநோய் என்று பயந்தனர். (உண்மையில் தொற்றுநோய்களுக்குள்ளாக, மிகக் குறைவாக அடுத்தவரைப் பிடித்துக்கொள்ளக்கூடிய நோய் இது.) எனவே தானே தொழுநோய்க்கு மருத்துவம் செய்யும் படிப்பைப் படிக்க முடிவுசெய்தார். இவரது பின்னணியோ சட்டப்படிப்பு. ஆனால் அப்போது ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். அவரது சிபாரிசில், ஆம்டே கொல்கத்தாவில் இருந்த Tropical School of
Medicine-ல் 1949-ல் சேர்ந்தார். அங்கு தொழுநோய்க்கான அடிப்படை சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டார்.
1951-ல் மத்தியப் பிரதேச அரசு, தொழுநோயாளிகள் காப்பகம் ஒன்றைக் கட்ட ஆம்டேக்கு 50 ஏக்கர் நிலத்தை அளித்தது. சரியான காட்டு நிலம். பாறைகள். காட்டு விலங்குகள். தண்ணீர் கிடையாது. அந்த இடத்துக்கு தன் மனைவி, சிறு குழந்தை, சில தொழுநோயாளிகள், ஒரு நொண்டிப் பசு, 4 நாய்கள், கையில் ரூ. 14 ஆகியவற்றுடன் ஆம்டே சென்று சேர்ந்தார். அந்த இடத்துக்கு ஆனந்தவனம் என்று பெயரிட்டார்.
முதலில் தொழுநோயாளிகள் உதவியுடன் கிணறு தோண்டினார். குடில்கள் அமைத்துக்கொண்டார். அவர்கள் கொண்டுசென்ற நான்கு நாய்களையும் சிறுத்தைகள் பிடித்துச் சென்று தின்றுவிட்டன. மாடு தப்பித்தது. சில நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு மேலும் சில மாடுகளை தானமாக அளித்தன. அந்த மாடுகளின் பாலை விற்று பணம் சேர்த்து அதில் பிழைக்க அவர்கள் எண்ணினர். ஆனால் தொழு நோயாளிகள் கை பட்ட பாலாக இருக்குமோ என்ற பயத்தில் பக்கத்தில் உள்ள கிராமவாசிகள் பாலை வாங்கவில்லை. பின் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டுவந்து காண்பித்து, ஆம்டேயின் மனைவிதான் பால் கறக்கிறார் என்று சொன்னபிறகுதான் பாலை விற்கமுடிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தொழுநோயாளிகள் உதவியுடன் சுற்றுப்புறத்தில் காய்கறிகள் பயிரிடுதல், தானியங்கள் பயிரிடுதல் ஆரம்பித்தது. விரைவில் அவர்கள் அந்தக் காட்டை பசுமை பொங்கும் நிலமாக மாற்றிவிட்டனர். மேலும் பல தொழுநோயாளிகள் அங்கு வர ஆரம்பித்தனர். வெளிநாட்டு நிதி உதவியுடன் அங்கே தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.
ஆனந்தவனத்தில் தொழுநோய் குணமாக ஆரம்பித்தது. ஆனால் குணமான தொழுநோயாளிகளும் சமூகத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தனித்தே இருக்கவேண்டி இருந்தது. எனவே தொழுநோயாளிகள், குணமானவர்கள், பிறர் என அனைவரும் அங்கேயே வசிக்குமாறு அவர்கள் அனைவருக்கும் வசிக்குமிடங்கள் கட்டப்பட்டன. அனைவரும் தத்தம் சக்திக்கு ஏற்ப உழைக்குமாறு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. விவசாயம், பொருள் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு, உழைப்பில் நோயை மறந்து தொழு நோயாளிகள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தொடங்கினர்.
தொழுநோயை எதிர்கொள்ள சுற்று வட்டாரத்தில் பல இடங்களில் 1950களில் கிளினிக்குகள் பலவற்றை ஆம்டே கட்டத்தொடங்கினார். 1970களில் தொழுநோயை எதிர்கொள்ள நல்ல மருந்துகள் வர ஆரம்பித்தன. அந்தக் கட்டத்தில் ஆம்டேயின் இரு மகன்களும் டாக்டர் படிப்பை முடிந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு டாக்டருக்குப் படித்த பெண்களை மணம் செய்துகொண்டனர். ஆம்டேக்கு மஹாராஷ்டிர அரசும் பல ஏக்கர் நிலங்களைக் கொடுத்தது. அதில் மேலும் சில இடங்களில் ஆனந்தவனம் போல தொழுநோய் ஒழிப்பில் ஈடுபடும் இல்லங்களைக் கட்ட ஆம்டே முற்பட்டார்.
ஆனால் சில இடங்களில் உள்ளூர் கிராமவாசிகளுக்கும் ஆம்டேக்கும் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.
ஒரு கட்டத்தில் ஆம்டே மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல்வாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். பழங்குடியினருக்காக மருத்துவமனை கட்டுதல், அவர்களுக்குக் கல்வி கற்பித்தல், நல்ல விவசாய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டே ஈடுபட்டுவருகிறார்.
***
1990களின் ஆரம்பத்தில் பாபா ஆம்டே நர்மதா பச்சாவோ ஆந்தோலனில் ஈடுபடத் தொடங்கினார். நர்மதா அணை கட்டப்பட்டால் பல லட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும் என்பது அணை எதிர்ப்பாளர்களின் கருத்து. ஆனால் அந்தப் போராட்டத்தில் இருக்கும்போது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பையில் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்து பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். காந்தி நோவாகாளியில் செய்ததுபோல, ஆம்டே தன் மனைவியுடன் மும்பை சென்று மத ஒற்றுமை பற்றிப் பேசினார். சில மாதங்கள் அங்கே தங்கியிருந்தார்.
***
1990களின் ஆரம்பத்தில் பாபா ஆம்டே நர்மதா பச்சாவோ ஆந்தோலனில் ஈடுபடத் தொடங்கினார். நர்மதா அணை கட்டப்பட்டால் பல லட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும் என்பது அணை எதிர்ப்பாளர்களின் கருத்து. ஆனால் அந்தப் போராட்டத்தில் இருக்கும்போது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பையில் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்து பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். காந்தி நோவாகாளியில் செய்ததுபோல, ஆம்டே தன் மனைவியுடன் மும்பை சென்று மத ஒற்றுமை பற்றிப் பேசினார். சில மாதங்கள் அங்கே தங்கியிருந்தார்.
ஆனால் காந்திக்குக் கிடைத்த வெற்றி, ஆதரவு, ஆம்டேக்குக் கிடைக்கவில்லை. மற்றொரு பக்கம், நர்மதா அணை கட்டப்படுவதிலும் ஆம்டேக்குத் தோல்வியே கிடைத்தது. அவரையும் மேதா பட்கரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து ஜெயிலில் எறிந்தபிறகு அணைப் பகுதியில் நீர் நிரப்பப்பட்டது.
கரடுமுரடான நிலப்பரப்பில் வண்டிகளில் பயணம் செய்தது, ஓயாமல் ஓடியாடி உழைத்தது ஆகிய காரணங்களால், ஆம்டேக்கு 1970களிலேயே முதுகெலும்பில் இரண்டு மூன்று துண்டுகளை எடுக்கவேண்டியிருந்தது. அதனால் இடுப்பிலும் முதுகிலும் பிரேஸ் அணிந்தே அவர் இயங்கிவந்தார். அவரால் உட்கார முடியாது. நிற்கலாம் அல்லது படுக்கலாம். தனது கடைசி 40 வருடங்கள் முழுக்க முழுக்க இப்படியே இயங்கினார் அவர்.
நர்மதா அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் என்ற அமைப்பில் மேதா பட்கருடன் சேர்ந்து இவர் கலந்துகொண்டிருக்கிறார்.
இளமையில் தந்தையுடன் பயணிக்கும் முரளிதர், நிலமற்ற ஏழை மக்கள் படும் அல்லல்களை அறிந்து வெதும்புகிறார்- "எங்களைப் போன்ற குடும்பங்களில் இறுக்கமான ஒரு கருணையின்மை இருக்கிறது," என்கிறார் பாபா. "புறவுலகில் நிலவும் அவலத்தைக் காணாதிருக்க அவர்கள் வலுவான தடைகளை எழுப்பிக் கொண்டார்கள், நான் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்தேன்". என்கிறார் பாபா ஆம்தே. ஏழை – பணக்கார, சாதீய பாகுபாடுகளை அவரால் ஏற்றுகொள்ள இயலவில்லை. ஒருமுறை தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த வேலைக்கார நண்பருடன் தன் உணவைப் பகிர்ந்து கொண்டமைக்காக அவர் கடுமையாக தண்டிக்கபட்டார்.
இளமையில் இயற்கையுடன் ஏகாந்தமாக காலம்கழிப்பதில் அவருக்கொரு பெருவிருப்பம் உண்டு. தனியாகவோ அல்லது மாட்டுவண்டியைப் பூட்டிக்கொண்டோ உலவக் கிளம்பிவிடுவார். அப்படித்தான் பஸ்தார் மாவட்ட பழங்குடி மக்களான மதிய கோண்ட் இனத்தவர்களின் பரிச்சயம் அவருக்கு கிட்டியது. பழகுவதற்கு இனிமையான எளிய மக்கள். தாம் வாழ்ந்து வேட்டையாடிய காட்டின் இண்டு இடுக்குகளைக்கூட முழுமையாக அறிந்திருந்தனர்.
சினிமாவில்கூட அவருக்கு பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் சினிமா சஞ்சிகைகளில் விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அப்படி தனிப்பட்ட முறையில் பிரபல நட்சத்திரம் நார்மா ஷியரருடன் நல்ல கடித தொடர்பும் நட்பும் இருந்தது அவருக்கு.
முரளிதர் உடலை ஆரோக்கியமாக பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். உடற்பயிற்சிகள் செய்து வந்தார், மல்யுத்தம், குதிரையேற்றம், நீச்சல் போன்றவைகளை பழகி வந்திருக்கிறார். முறையாக இசை பயின்றுள்ளார், மராத்தியில் அற்புதமான பல கவிதைகள் எழுதியிருக்கிறார். இசை, நாடகம் போன்ற நிகழ்த்துகலைகள் மீது அவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது.
முரளிதர் துணிவுள்ள ஆளுமை, ஒருமுறை ஒரு பெண்ணை சில ஆங்கிலேய ஆண்கள் அவமானப்படுத்தியது பொறுக்காமல் அடிதடியில் இறங்கியதன் விளைவாக ஏற்பட்ட வடுக்கள் இறுதிவரை அவருடலில் இருந்தன.
காலனிய சக்தியான ஆங்கிலேய அரசிற்கு எதிராக விடுதலை போராட்டம் சூடு பிடித்திருந்த காலகட்டத்தில் முரளிதரும் அன்றைய வேறு பல இளைஞர்களைப் போல், ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க வன்முறை வழியை நம்பியவர்களுக்கு அவசியமான ஆயுதங்களை சேகரிப்பது முக்கியம் என நம்பினார். 1935ஆம் ஆண்டு பலூசிஸ்தான் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, முரளிதர் சீரமைப்பு பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு க்வேட்டா சென்றார். பின்னர் 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து சிறையில் அடைபட்ட தலைவர்களுக்காக வாதாட அழைத்தார், அதற்காக சிறையும் சென்றார்.
சட்டம் பயின்ற பின்னர், மகாராஷ்டிரத்தின் சந்திரபுர மாவட்டத்தில் உள்ள வரோரா எனும் சிற்றூரில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார். ஆனாலும் அவருள் ஏதோ ஒன்று அவரை அமைதியிழக்கச் செய்தது. ஏழை எளிய மக்களைப் பற்றியே எப்போதும் சிந்தித்திருந்தார். நீதிமன்றத்தில் தான் உதிர்க்கும் சில உதிரி சொற்களைக் கொண்டு தன்னால் இத்தனை பொருளீட்ட முடிகிறது ஆனால் நிலமற்ற ஏழை தொழிலாளி பனிரெண்டு மணி நேரம் கடுமையாக உழைத்து அவன் தனது உணவுக்கு தேவையான ஒரு ரூபாயைக்கூட சம்பாதிக்க சிரமப்படும் அமைப்பில் உள்ள அநீதி அவரைக் குடைந்துகொண்டே இருந்தது. ‘எனது பண்ணையில் ஒரு விதைகூட விதைக்காத நான் பண்ணைவீட்டின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறேன், கடுமையாக உழைக்கும் இவர்கள் வெயிலில் அவதியுறுகிறார்கள்,’ என்று வருந்தினார் அவர். மேலும் தனது வக்கீல் தொழில் சார்ந்து பல பொய்களைக் கூறவேண்டிய நிர்பந்தமும் அவரைத் தொந்தரவு செய்தது. தெரிந்தே பொய்யாக வாதாடி அதில் வெற்றியும் பெற்றார்.
இந்தச் சிந்தனைகளால் தூண்டப்பெற்று, அவர் தன் மட்டத்தில் என்ன செய்ய இயலுமோ அதில் ஈடுபட துவங்கினார். அவரது நிலத்தில் பணிபுரியும் தலித் மக்கள் கிராமத்து கிணற்றில் நீர் இறைத்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தொலை தூரம் சென்றுதான் நீர் எடுத்து வர வேண்டும். கிராமத்து உயர் சாதியினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தனது பண்ணையில் உள்ள கிணற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்.
பெற்ற விருதுகள்
பத்மசிறீ விருது (1971)பத்மவிபூசன் விருது (1986)காந்தி அமைதி பரிசு (1993)டாமின்-டட்டன் விருது (1983)ரமன் மக்சேசே விருது (1985) தமிழில் அவரைப் பற்றிய புத்தகம் வெளிவந்துள்ளது, புத்தகத்தின் பெயர்: பாபா ஆம்தே : மனிதத்தின் திருத்தூதர், ஆசிரியர்: கோபி ஆனயடி
அவரது இறப்பு பற்றிய செய்திக் குறிப்பு தென்றல் என்னும் வலைத்தளத்தில் பின்வருமாறு வெளியிடப்பட்டது.
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார். அவருக்கு வயது 94. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளின் நலம் காக்கத் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதுடன், பல்வேறு சேவை அமைப்புகளையும் உருவாக்கி வழிநடத்தினார் ஆம்தே.
இறப்பு
9 பெப்ரவரி 2008(அகவை 93) ஆனந்தவன், மகாராட்டிரம், இந்தியா
தேசியம்
இந்தியா
வாழ்க்கைத் துணை
சாதனா ஆம்தே
பிள்ளைகள்
மரு. விகாசு ஆம்தே மரு. பிரகாசு ஆம்தே
பாபா ஆம்தே எனப் பரவலாக அறியப்பட்ட முரளிதர் தேவதாசு ஆம் தேதி (மராத்தி: बाबा आमटे) (டிசம்பர் 26, 1914 – பெப்ரவரி 9, 2008) ஓர் இந்திய சமூக சேவகர், செயற்பாட்டாளர். இவர் தொழு நோயால்பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் அக்கறை காட்டினார்.
வழக்கறிஞராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கிய ஆம்தே, காந்தியக் கொள்கை களால் ஈர்க்கப்பட்டார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டார். பின்னர் சமூக சேவகராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந் தார். 'சத்தியத்தின் வீரர்’ என்று மகாத்மா காந்தியடிகளால் பாராட்டப் பெற்ற ஆம்தே, தொழுநோயாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார். பாரத இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ’பாரத் ஜோடோ’ என்ற அமைப்பைத் துவங்குவதில் ஈடுபட்டிருந்த அவர், ரத்தப் புற்றுநோயால் காலமானார்.
அவர் மறைந்து விட்டாலும் அவரது சேவைக்குச் சான்றாக என்றும் இருக்கும், மகாராஷ்டிராவின் வரோராவில் அவர் உருவாக்கிய 'ஆனந்தவனம்' ஆசிரமம்.
அவரைப் பற்றிய திரைப்படம்:
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர் நடிகர் நானா படேகர். இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே - தி ரியல் ஹீரோ என்ற மராத்தி படத்தில், பாபா ஆம்தேயின், மகன் டாக்டர் பிரகாஷ் ஆம்தேயாக சிறப்பாக நடித்து பாராட்டுகளை பெற்றவர். இப்படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு எல்லோராலும் பாராட்டப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நானா படேகர், பாபா ஆம்தேயின் வாழ்க்கையை பற்றி படமாக எடுக்கவுள்ளேன். இதில் நானே நடித்து, இயக்கி, தயாரிக்கிறேன். பாபா ஆம்தே மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆம்தே என இரட்வை வேடங்களில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தை ஆரம்பிக்க இன்னும் ஓர் ஆண்டுகளாகும்.
பாபா ஆம்தே பெரிய ஜமீன்தாரராக, வக்கிலாக, மனித கழிவை தலைமேல் தூக்கி செல்லும் பணியாளர்களின் யுனியன் லீடராகவும் இருந்தவர். யாரோ சிலர் துப்பரவு தொழிலாளிகளுக்கு தலைவராக இருப்பது சுலபம், துப்பரவு தொழிலை செய்வது தான் கஷ்டம் என்று பேசிவிட்டனர். உடனே தானே மனித கழிவை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். ஒரு சமயம் அவர் மனித கழிவை தலை மீது தூக்கி செல்லும்போது திடீரென்று மழை வந்துவிட்டது. மழைநீர் பட்டு அந்த கழிவு தலைவழியாக அவரது முகத்திலும் வழிய ஆரம்பித்தது. அதேசமயம் குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்டு சாக்கடையில் விழுந்து கிடக்கு ஒருவரை பாபா ஆம்தே பார்க்கிறார். அவரை மிகவும் பாதிக்கிறது. அஜாந்தா எல்லோரா குகைகளில் உள்ள சிற்பங்களில் அழகை பார்க்க முடியும் என்றால், உயிருடன் இன்னும் இருக்கும் குஷ்டரோக நோயாளியிடம் ஏன் பார்க்க முடியாது.? அந்த நிகழ்வுகளில் இருந்து குஷ்டரோகி நோயாளிக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்தார் பாபா ஆம்தே. அவருடைய குடும்பமும் அவருக்கு முழுமையாக பக்க பலமாக இருந்தது.
பாபா ஆம்தேயின் குடும்பத்துடன் எனக்கு 42 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அந்த நெருக்கம், இந்தப்படத்தில் நடிக்க எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்கிறார் நானா படேகர்.
மிருகங்களுடன் தொடர்பு கொள்ளும் டெக்னிக் பிரகாஷ் ஆம்தேக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. பெரிய ஆண் சிங்கம் ஒன்றை மூன்றே மணிநேரத்தில் நண்பனாக்கிவிட்டார். முதல் இரண்டு மணிநேரம் சிங்கத்தை பார்த்து கொண்டே இருந்தார், பிறகு அந்த சிங்கம் அவர் அருகில் வந்து பரிவு காட்டியது. அப்படி என்ன மேஜிக் செய்தாரோ தெரியவில்லை!
பல கமர்ஷியல், வியாபார ரீதியான படங்களை நான் செய்திருக்கிறேன். அதேப்போல் டாக்டர் பிரகாஷ் போன்றோர் மூலம் ஆம்தே - தி ரியல் ஹீரோ போன்ற மாறுபட்ட படங்களையும் செய்கிறேன். இந்த தருணத்தில் இப்படி ஒரு படத்தில் நான் நடித்திருப்பது சரியாக தோன்றுகிறது. இதற்கு முன்னர் இப்படி ஒரு படத்தில் நடித்திருந்தால் அதற்கான மெச்சூரிட்டி எனக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
இவ்வாறு கூறினார்.
நானா படேகருக்கு மீடியா தவிர ரசிகர்களிடையேயும் பெரிய வரவேற்பு இருந்தது. ரசிகர்களிடமும் பேசி, அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார்.
நன்றி-
செய்திகள் வழங்கி பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் புத்தக ஆசிரியருக்கும் நன்றிகள்
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment