2018ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது...!!
தமிழக வனத்துறை தேர்வு, 2018
TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர்
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 புற்றுநோய் ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துனர்வு ஒப்பந்தத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
🍀 இந்திய, ரஷ்ய படையினரின் கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரப்பிதேச மாநிலம் ஜான்சியில் தொடங்கியுள்ளது.
🍀 'நகர்ப்புற உள்கட்டமைப்பு அரசு மற்றும் தனியார் கூட்டு நகராட்சிக் கழகத்தின் நிதியியல் புத்தாக்கங்கள்" குறித்த தெற்காசிய மண்டல மாநாடு, புதுடெல்லியில் நடைபெற்றது.
🍀 மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் 24-வது தலைமை நீதிபதியாக, 'நீதிபதி சஞ்சய் குமார் சேத்" நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கியானது (BIS - Bank for International Settlements) , சித்தார்த் திவாரியை, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான தலைமைப் பிரதிநிதியாக நியமித்துள்ளது.
🍀 அடோப் சிஸ்டம்ஸ் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாந்தனு நாராயண், இந்த ஆண்டின் உலகளாவிய சிறந்த இந்தியர் விருதினை வென்றுள்ளார்.
🍀 2018 ஆம் ஆண்டிற்கான 'வாழ்நாள் சாதனையாளர் விருது" டாக்டர் மார்த்தா ஃபரெல், என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
🍀 முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு 2017ம் ஆண்டுக்கான, இந்திரா காந்தி அமைதிக்கான விருது வழங்கப்பட்டது.
🍀 அரசு பத்திரங்களில் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் 'என்எஸ்இ கோ பிட்" என்ற புதிய மொபைல் ஆப்பையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது.
🍀 உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, சீனா உருவாக்கியுள்ள 'பெய்டோ" வழிகாட்டும் தொழில்நுட்பத்துக்கு (பிடிஎஸ்) வலு சேர்க்கும் வகையில், கூடுதலாக இரு செயற்கைக்கோள்களை அந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற kavimaliaravan.blogspot.com என்ற வலைப்பூவை காணவும்...
No comments:
Post a Comment