#TNPSC CYRRENT AFFAIRS-201கடந்து வந்த 2018.. உலகம் ஓர் பார்வை - பாகம் 02 !!
2018... உலகப் பார்வை - பாகம் 02
2018க்கு குட்பை சொல்ல இன்னும் சில தினங்களே உள்ளது. இந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள் எண்ணற்றவை. சில நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சில நிகழ்வுகள் நம் மனதில் இடம்பிடித்து மாற்றத்தை தந்துள்ளது. அவ்வாறு உலகளவில் 2018ஆம் ஆண்டு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது......
உலகிலேயே மிக உயரமான சிலை
உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை இந்தியாவில் அக்டோபர் 31ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் மதிப்பு 3000 கோடி ரூபாயாகும். நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
ட்ரம்ப் - கிம்மின் இணைந்த கைகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், இந்த இரு நபர்களின் சந்திப்பை உலகமே அதீத கவனத்துடன் கவனித்து வந்தது.
வடகொரியா உருவான பின், அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். உலக நாடுகளின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பு+ரில் செண்டோசா தீவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
ஃபேஸ்புக் தகவல் திருட்டு
ஃபேஸ்புக் தகவல் திருட்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்புக்காக லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற இணைய நிறுவனம் சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக மார்ச் 20ஆம் தேதியன்று குற்றச்சாட்டு எழுந்து மிகவும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், பேஸ்புக் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களுடைய தகவல்களை திருடியதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார்.
இங்கிலாந்து இளவரசர் திருமணம்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹhரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கில் திருமணம் மே மாதம் 19ஆம் தேதி நடந்தது.
ஸ்டீபன் ஹhக்கிங்
பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹhக்கிங், 2018ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தனது 76வது வயதில் மறைந்தார். பிரிட்டனை சேர்ந்த இவர், 'கருந்துளை மற்றும் சார்பியல்" சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர்.
2018ல் உலகளவில் நிகழ்ந்த மாற்றங்கள்
நேபாளத்தின் 41-வது பிரதமராக காட்கா பிரசாத் சர்மா ஒலி பிப்ரவரி 15ஆம் தேதியன்று பதவியேற்றார்.
தென்னாப்பிரிக்காவின் அதிபராக 9 ஆண்டுகள் பதவி வகித்த ஜேக்கப் ஜூமா, ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதியன்று ராஜினாமா செய்தார். அதையடுத்து துணை அதிபராக இருந்த சிரில் ரமஃபோஸா தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக பிப்ரவரி 15ஆம் தேதியன்று பதவியேற்றார்.
ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபராக இருந்த விளாடிமிர் புதின் 76 சதவீத வாக்குகள் பெற்று நான்காவது முறையாக ரஷ்ய அதிபராக மார்ச் 18ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கியூபா நாட்டின் புதிய அதிபராக மிகேல் டியஸ் கானெல் ஏப்ரல் 19ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் கியூபாவை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.
மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமரான மஹhதீர் பின் முஹமது 93வது வயதில் மீண்டும் மே 10ஆம் தேதியன்று அந்நாட்டின் பிரதமரானார்.
ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எமர்சன் நங்கக்வா ஜூலை 31ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது சாலி செப்டம்பர் 23ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment