###TNPSC CURRENT AFFAIRSபீத்தா என்னும் புதிய முன்முயற்சி திட்டம்...!!|||####TNPSC தேர்வு - 2018
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
💥 புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான நிதி ஆதாரங்களில், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக, தொழில் நிறுவனம் - கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த முதல் மாநாடு மும்பையில் நடைபெற்றது.
💥 மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விவசாயத் தொழில், கிராமப்புற உருமாற்றத்திற்கான SMART முன்முயற்சியை தொடங்கியுள்ளார்.
💥 தலைநகர் டெல்லியில் வரும் 22ம் தேதி, 31-வது ஜிஎஸ்டி குழு கூட்டம், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற உள்ளது.
💥 சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (International Olympic Committee-IOC), ஜீயித் ராத் அல்-ஹுசைன் தலைமையில், மனித உரிமைக்களுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
💥 மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக, ஹைதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தக் கல்வி நிலைய பேராசிரியர், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
💥 11 ஒலிம்பிக் மற்றும் 3 பாரா ஒலிம்பிக் வீரர்களை புதிய பயிற்சியாளர்களாக, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சாய்) நியமித்துள்ளது.
💥 ஒடிசா அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த 'பீத்தா" PEETHA - (Peoples Empowerment Enabling Transparency and Accountability) என்னும் புதிய முன்முயற்சி திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
💥 தென் ஆப்பிரிக்கா நாட்டின் 'தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக" இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 'ஷமிலா படோஹி" நியமிக்கப்பட்டுள்ளார்.
💥 உள்நாட்டு பாதுகாப்புப் தொழில்துறையின் அறிவுசார் சொத்துரிமைக் கலாச்சாரத்தை (IPR - Intellectual Property Right) மேம்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் 'ரக்ஷா கயான் சக்தி" என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
💥 உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான குளோபல் கார்பன் புராஜெக்ட் ஆய்வில் இந்தியாவானது 7 சதவீதம் கார்பன் வெளியேற்றத்துடன் நான்காவது இடம் பிடித்துள்ளது. இதில், சீனா (27 சதவீதம்) முதலிடத்திலும், அமெரிக்கா (15 சதவீதம்) இரண்டாம் இடத்திலும் உள்ளது.
No comments:
Post a Comment