இயற்கை சீற்றத்தில் இந்தோனேசியா-இலங்கை!!!
🌀 கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை பெருமளவில் உலுக்கிய சுனாமி பாதிப்பு ஏற்பட்ட நாள், நாளை தான். 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி தமிழக கடற்கரை பகுதிகள் எல்லாம் பெரும்பாதிப்புக்குள்ளாக்கிய அந்த கோரசம்பவம் இன்னும் மக்களின் நினைவிலிருந்து அகலவில்லை.
🌀 அந்தநாளில் அதிகாலை நேரத்தில் இந்தோனேசியா நாட்டிலுள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பெரிய பூகம்பம் ஏற்பட்டது.இந்தோனேசியா மட்டுமின்றி, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்பட பலநாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.
🌀 இந்த நாடுகளில், மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 7,941 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.🌀 இந்தநேரத்தில், அதே இந்தோனேசியா நாட்டில், கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுலவேசி என்ற தீவு பகுதியில் சுனாமி தாக்கியதால் 2,500பேர் மரணம் அடைந்தனர்.
🌀 இந்த சுனாமி வருவதற்கு முன்பு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு மக்களுக்கு சுனாமி அலைகள் தாக்கும் முன்பாக அபாய எச்சரிக்கை கூறமுடிந்தது. அதனால் இதைவிட அதிகமான பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
🌀 3 மாதத்தில் மீண்டும் நேற்று முன்தினம் இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது.அனக் கிரகட்டாவ் எரிமலை தொகுப்பில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. அங்கிருந்து ஏராளமான எரிமலைக்குழம்புகள் வெளியேறியது. திடீரென்று தாக்கியதால் உயிர்தப்புவதற்கான முயற்சிகளில் யாரும் ஈடுபடமுடியவில்லை.🌀 222 பேர் உயிரிழந்ததாகவும், 558 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 350 படகுகள் சேதம் அடைந்ததாகவும், 843 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
🌀 ஆனால் இப்போது மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் உயர்ந்துகொண்டே போகிறது.இந்தோனேசியாவில் ஏற்பட்ட பேரழிவிற்காக உலகமே கலங்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறது.
🌀 இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது.
🌀 இதனால் 13,466 குடும்பங்களைச் சேர்ந்த 44,959 பேர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
🌀 கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க ராணுவத்தினரும், விமானப்படை ஹெலிகாப்டர்களும் முழுவீச்சில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
🌀 அண்டை நாடு என்று மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவு என்ற வகையில், தமிழர்களும் இந்த துன்பத்தில் பங்குகொள்கிறார்கள். தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment