9-வயது தமிழக சிறுமிக்கு, டாக்டர் பட்டம் அளிக்கும் மலேசியா!
🌀 யோகாவில் 14 உலக சாதனைகளை படைத்துள்ள ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த பிரிஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
🌀 உள்ளூர் ஊடக தகவலின் படி, பிரிஷா என்னும் 9 வயது சிறுமி யோகா, நீச்சல் உள்ளிட்ட கலைகளில் 14 உலக சாதனைகளை படைத்துள்ளார். சிறுமியின் திறனை பாராட்டும் விதமாக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படவுள்ளது.
🌀 திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பிரிஷா, பாளையங்கோட்டையில் உள்ள PBIS பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரிஷாவின் தாயார் தேவிபிரியாவும் யோகா செய்வதால், அவரும் பிரிஷாவுக்கு பெரும் உதவியாய் இருந்து வருகிறார்.
🌀 அதனால் இளம் வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று, நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
🌀2017 டிசம்பரில், ’ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ சாதனை நிகழ்ச்சியில் சாதனை படைத்தார். மலேசியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
🌀பிரிஷாவின் தாயார் மற்றும் பாட்டியும் யோகா பயிற்றுநர்கள் ஆவர். விரைவில் இவர்கள் மூவரும் இணைந்து புதிய உலக சாதனை படைக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.
🌀 ஆசனத்தில் பெரும் சவாலான 'கண்ட பேருண்டா' என்ற ஆசனத்தை வேகமாகச் செய்வதில் பிரிஷா, கடந்த ஆண்டு நவம்பரில், கண்ட பேருண்டா ஆசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்து உலக சாதனை படைத்தார்.
🌀 பிரிஷாவின் திறமையைக் கண்டு வியந்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
🌀 பிரிஷாவுக்கு ஏராளமான பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில் சில... யோகா ராணி, யோகா கலா, யோகா ஸ்ரீ, யோகா ரத்னா, யோகா செல்வி, ஆசனாஸ்ரீ முதலியவை. இளம் சாதனையாளர் என்ற பட்டத்தையும் விட்டுவைக்கவில்லை.
🌀 பிரிஷாவிற்கான கௌரவ டாக்டர் பட்டம் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. 9-வயது ஆகும் இச்சிறுமி இந்த அறிவிப்பின் மூலம் நாட்டின் இளம் டாக்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையினை பெருவார் என தெரிகிறது.
No comments:
Post a Comment