Wednesday, December 26, 2018

TNPSC TAMIL-2018 பழந்தமிழர் செப்புக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது எது? 6ஆம் வகுப்பு - முதல் பருவம் பொதுத்தமிழ்

TNPSC TAMIL-2018
பழந்தமிழர் செப்புக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது எது?
6ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்


1) திருவருட்பாவை இயற்றியவர் யார்? - இராமலிங்க அடிகளார்

2) நாலடியார் ................. நு}ல்களுள் ஒன்று. - பதினெண்கீழ்க்கணக்கு

3) பதினெண் என்பதற்கு ............... என்பது பொருள். - பதினெட்டு

4) நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதனைப் போன்றவர்? - தொலைவிலிருந்து நீரைக் கொண்டு வரும் வாய்க்கால் போன்றவர்

5) ′மேலவர்′ - எதிர்சொல் எழுதுக. - கீழவர்!


6) ′வலசைபோதல்′ என்றால் என்ன? - பருவத்திற்கேற்ப விலங்குகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல்

7) மறவர்களுக்கு இரும்புக்கொல்லர்கள் வடித்துத் தந்தவை ............. - வில், வேல், வாள், கேடயம்

8) உழவர் பெருமக்களுக்கு இரும்புக்கொல்லர்கள் செய்தளித்தவை ............... - மாட்டுவண்டியின் அச்சு, கடையாணி முதற்கொண்டு வேளாண் கருவிகளான அரிவாள், கோடரி, கத்தி, கடப்பாரை முதலிய பொருள்

9) பழந்தமிழர் புலவர்க்கு இரும்புக்கொல்லர்கள் கொடுத்தது............. - எழுத்தாணி

10) பழந்தமிழர் செப்புக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது ..................... - கூரம் நடராசர் செப்புத் திருமேனி

11) சிலையைச் செதுக்கவும் மலையைப் பிளக்கவும் பயன்படுவது .......... - உளி

12) ′வையம்′ என்ற சொல்லின் பொருள் தருக. - உலகம்

13) ′மறம்′ என்ற சொல்லின் பொருள் தருக. - வீரம்

14) ′அணியர்′ என்ற சொல்லின் பொருள் தருக. - நெருங்கி இருப்பவர்

15) ′செய்′ என்ற சொல்லின் பொருள் தருக. - வயல்


No comments:

Post a Comment