இன்றைய முக்கியச் செய்திகள்
டிசம்பர் 28
உலகச் செய்திகள்
இந்தியாவின் அதிவேக ரயிலான டிரெய்ன்-18 வரும் ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருக்கிறார்.
மாநிலச் செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள் ! 👉
ஆந்திர மாநிலம் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பணிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பு+மி பு+ஜை செய்து வைத்தார்.
5 மணி நேர கடுமையான விவாதத்திற்குப் பின் முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிதி ஆயோக்" அமைப்பு, பின் தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தின் விருதுநகர், தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், 20வது இடத்தில் உள்ளது.
தமிழகப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் காலை 10 மணியளவில் துவங்கி பிற்பகல் 12.45 மணியளவில் முடிவடையும் என தமிழகப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ள+ர் வர்த்தகர்கள் புகார் அளித்ததையொட்டி மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியையொட்டி வெளியயூர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 11,12,13,14 ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அவர் கூறினார். இதில் சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும் என்ற அவர், மொத்தமாக 24,708 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
விளையாட்டுச் செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித் வங்காள தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை வங்காள தேச கிரிக்கெட் போர்டு திரும்பப் பெற்றுள்ளது.
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பும்ராவின் வேகப்பந்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வெளிநாட்டு மண்ணில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. ராகுல் டிராவிட் கடந்த 2002ஆம் ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் 1137 ரன்கள் குவித்திருந்தார். தற்போது கோலி 1138 ரன்கள் சேர்த்து டிராவிட் சாதனையை முறியடித்துள்ளார்.
No comments:
Post a Comment