###TNPSC CURRENT AFFAIRS - 2018
2018-ல் தமிழக மாவட்டங்கள் இவ்வளவு சாதனைகளை புரிந்ததா?
2018... தமிழக மாவட்டங்கள் ஒரு பார்வை..!!
சென்னை
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டையை வழங்கிய முதலாவது பள்ளியாக, சென்னை மாவட்ட போரூரை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வாகியது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்டம், சின்னமோட்டூர் பகுதியிலுள்ள ஒரு தென்னந்தோப்பில் இருந்து சாளுவ நரசிங்க மன்னர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அதை வேலு}ர் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் சுமார் 10கி.மீ. தொலைவில் வேடியப்பன் நகரில் ஒரே இடத்தில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த 6 நடுகல்கள் அமைந்துள்ள நடுகல் கோட்டம் கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திண்டிவனம் நெடுஞ்சாலையோரம் ஊரணித்தாங்கல் கிராம மலைப்பகுதியில் பெரிய பாறைகள் உள்ளன. மலை அடிவாரத்தில் செல்லும் சுனைக்கு அருகிலுள்ள பெரிய பாறையில் புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.
நாகப்பட்டினம்
நவம்பர் 16ஆம் தேதி கஜா புயல் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன.
பெரம்பலூர்
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெரம்பலூர் மாவட்டம் எளம்பு+ரில் சாலை அமைக்கும் பணிக்கு நிதி வழங்கினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் கலைத் தட்டுக்கு, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் லோகோவை, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
திருச்சி
மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்கள் பங்கேற்றிருந்த நிலையில், தூய்மையான நகர வரிசை பட்டியலில் திருச்சி 13வது இடத்தை பிடித்தது. 16வது இடத்தை கோயம்புத்தூரும், 51வது இடத்தை ஈரோடும், 100வது இடத்தை சென்னை பெரு மாநகராட்சியும் பெற்றது.
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் 6 மாதங்களாக தேசியளவில் ஆய்வு மேற்கொண்டது. 500க்கும் மேற்பட்ட நகரங்களில் மேற்கொண்ட இந்த ஆய்வில், 111 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றது. இதன்முடிவில், இந்தியாவில் தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டம் 12வது இடத்தை பெற்றுள்ளது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட, தேக்வாண்டோ சங்கம் சார்பாக, 'கின்னஸ்" சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,430 டேக்வாண்டோ வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் 12 நிமிடங்கள் 40 வினாடிகள் ஒன்றாக டேக்வாண்டோ தற்காப்பு கலை சாகசம் புரிந்து, 'கின்னஸ்" சாதனையில் இடம்பிடித்தனர்.
கோவை
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக, கோவையில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் போலீசாருக்கு, கழிப்பறை வசதியுடன் நிழற்குடை நிறுவப்பட்டது.
இதில் உங்க மாவட்டம் இல்லையா? - நாளைய பகுதியில் பார்க்கலாம்..!!
No comments:
Post a Comment