Ttt18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு லைசன்ஸ் - மத்திய அரசு !!
2019
இன்றைய முக்கிய செய்திகள்
பிப்ரவரி 08
உலகச் செய்திகள்
பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்புர் சீக்கியர் புனிதத் தலத்திற்கான பாதையை பாகிஸ்தான் திறக்க திதி நிலையில் அது குறித்த பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலகி வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் பயணிக்கும் விமானங்களில் ரூ.1362 கோடி மதிப்பிலான, அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பாதுகாப்பு உபகரணங்களை பொருத்துவதற்காக, இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்தாதொர்.
70 கிலோ மீட்டர் வேகத்திற்குட்பட்ட மின்சாரத்தால் இயங்கும் கியர் இல்லாத பைக், ஸ்கூட்டர்களை ஓட்ட 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு லைசன்ஸ் வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
வரும் 2022ம் ஆண்டுக்குள் ரூ.5.35 லட்சம் கோடியில் 65,000 கிமீ தூர நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 384 வேட்பாளர்களின் பெயரை பதிவிடும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின் மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு 5,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் வழங்கப்படுகிறது.
மாவட்டச் செய்திகள்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைசீட்டு எந்திரம் குறித்து தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில், 2 நாட்கள் பறவைகளை கணக்கெடுக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
வங்காளதேச பிரிமீயர் லீக் இறுதிப் போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் - கொமிலா விக்டோரியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.
இராணி கோப்பை கிரிக்கெட்டில் ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பாவை எதிர்த்து விளையாடும் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து ஆட்டத்தில் எவர்டனை 2-0 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
No comments:
Post a Comment