###TNPSC_CURRENT_AFFAIRS|பிரவசி தீர்த்த தர்சன் யோஜனா, என்ற திட்டம் அறிமுகம் - 2019.
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக மைக்கேராசாப்ட் இந்தியாவானது, அதன் ரீவேவ் திட்டத்தின் கீழ், மின்னணு வர்த்தக தளமான www.re-wave.in என்ற தளத்தைத் தொடங்கியுள்ளது.
🍀 அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள டிஜிலியூரில்′ INS KOHASSA என்ற புதிய கடற்படை விமானத் தளத்தை, கடற்படை தலைமை அட்மிரலான சுனில் லம்பா தொடங்கி வைத்தாh;.
🍀 சிக்கிமின் ஆய்வாளர்கள் 120 ஆண்டுகளுக்குப் பிறகு, கஞ்சன்ஜங்கா தேசிய பூங்காவின் பக்கிம் என்ற பகுதியிலிருந்து, பழுப்பு நிற சிறிய மர வண்ணத்துப்பு+ச்சி வகையைக் கண்டறிந்துள்ளனர்.
🍀 மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்து கண்காணிப்பதற்காக, நிதி ஆயோக்கின் தலைமையில், ஒரு நிலைக் குழுவை மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
🍀 எஃகு தொழிற்துறையின் 4-வது சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கான, 2019 ஆம் ஆண்டின் எஃகு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, மும்பையின் கோரிகோனில் உள்ள NSE வளாகத்தில் நடைபெற்றது.
!
🍀 காவல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு, குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
🍀 உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) சமீபத்தில் எதிர்பாராத தொற்றுநோய் தயார்நிலை மற்றும் வர்த்தக தாக்கம் என்ற அறிக்கையை வெளியிட்டது.
🍀 சுபாஷ் சந்திரபோஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார், என்ற வருடாந்திர விருதை அரசு ஏற்படுத்தியிருக்கின்றது.
🍀 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும், என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
🍀 பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் புதுதில்லியில் பிரவசி தீர்த்த தர்சன் யோஜனா, என்ற திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
🍀 சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் ரூ. 23 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் சுரங்கம் மற்றும் புதிய மின் திட்டங்களை அமைக்க, என்எல்சி இந்தியா நிறுவனம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தனது.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment