Wednesday, February 27, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS|அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு !! இன்றைய முக்கிய செய்திகள்

###TNPSC_CURRENT_AFFAIRS|அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு !!
இன்றைய முக்கிய செய்திகள்

பிப்ரவரி 26
உலகச் செய்திகள்

ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட் தொடர்பாக அடுத்த மாதம் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்


5வது பருவத்தில் (Semester) நுழையும் மாணவர்கள் முதல் பருவத்தேர்வில் எந்த அரியரும் வைத்திருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய தேர்வு நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது.

தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே மந்திரி பியு+ஸ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பருப்பு வகைகள் விலை திடீரென உயர்ந்துள்ளன. கூடுதல் விலை கிடைப்பதால் இந்திய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமத்தை ஒரு மணி நேரத்தில் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.



மாவட்டச் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி சிறப்பு முகாமில் 13,222 பேர் விண்ணப்பம் செய்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து பெண்கள் எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார்.

கால்பந்து லீக் கோப்பை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்டில் செல்சியை 4-3 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார்.



No comments:

Post a Comment