###TNPSC|பிளாஸ்டிக் தடை... சென்னையில் அதிரடி..##
இன்றைய முக்கிய செய்திகள
பிப்ரவரி 04
உலகச் செய்திகள்
வரலாற்றில் முதல் முறையாக போப் ஆண்டவர் அரபு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். உலகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவராக பதவி வகித்த போப் ஆண்டவர்கள் யாரும் இதுவரை அரபு நாடுக்கு பயணம் சென்றதில்லை.
மாநிலச் செய்திகள்
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், பனியின் தாக்கம் காரணமாக ரயில் சேவை மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில காவல் ஆணையரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மெட்ரோ சானல் பகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
ஆந்திராவுக்காக தற்காலிகமாக 180 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று திறந்து வைத்தார்.
மத்திய அரசின் வருவாய் அதிகரித்தால் விவசாயிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 500 ரூபாயில் இருந்து மேலும் உயர்த்தப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இன்றுமுதல் விருப்பமனு வாங்கப்படுகிறது. தற்போது மத்தியில் உள்ள பாஜக அரசின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர்.
மாவட்டச் செய்திகள்
காதலர் தினத்தையொட்டி, ஓசு+ரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணியில் சாகுபடியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 2898 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற் கொண்டனர். இதன் முடிவில் 4.35 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்லில் நேற்று நடந்த 2ஆம் உலக கொங்கு தமிழர் மாநாட்டில் நாட்டு மாடுகள் கண்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
விளையாட்டுச் செய்திகள்
நியு+ஸிலாந்து அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் பெங்கள+ரு, விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் டி20 போட்டிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிராவிற்கு எதிராக விதர்பா முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பரபரப்பான கட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலத்தில் நடந்த இளையோருக்கான தேசிய மல்யுத்தப் போட்டிகளில் நு}ற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment