###TNPSC_CURRENT_AFFAIRS|பெண்களுக்காக 102-ஐ அறிமுகப்படுத்திய தமிழக அரசு !!|
பிப்ரவரி 05
உலகச் செய்திகள்
சீனாவில் நடைபெற்ற மலர்க் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் காங்சூ நகரில் நடைபெற்ற கண்காட்சியில் இடம் பெற்ற வண்ண மலர்களை காண 13 லட்சம் பேர் திரண்டதாக சீன அரசு கூறியுள்ளது.
தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஜிசாட்-31 செயற்கைக்கோள் ஐரோப்பிய நாடான பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது.
மாநிலச் செய்திகள்
சுகாதாரத்துறை சார்பில் தாய் - சேய் நல வாகன சேவைக்கான 15 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 102 என்ற எண்ணில் அழைத்து தாய் - சேய் நல சிகிச்சை தொடர்பான அவசர வாகன சேவையைப் பெறும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ஆம் தேதி அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
சு+ரிய மின் திட்டங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை-2019 என்ற புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க 3 புதிய திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
உலகளவில் 1500 இடங்களில் தமிழக அரசு சார்பில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை (புதன்கிழமை) கூடுகிறது.
சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.
மாவட்டச் செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய பணம் கிடைக்க, விவசாயிகள் தங்களது சரியான வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்குமாறு அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டார்.
விளையாட்டுச் செய்திகள்
கொச்சியில் நேற்று இரவு நடந்த 3வது புரோ கைப்பந்து லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹhக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. முடிவில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா 312 ரன்னில் ஆல்அவுட் ஆகிய நிலையில், புஜாரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேரா முதல்தர கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டபுள் செஞ்சூரி அடித்து அரிய சாதனையை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment