###TNPSC_CURRENT_AFFAIRS|எந்த மாநிலத்திற்கு சிறந்த மாநிலத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது?
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 அமெரிக்காவில் உள்ள, பென்சில்வேனியா பல்கலையின் உயரிய கர்நாட் விருது, இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
🍀 ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள 180 நாடுகளின் பட்டியலில், இந்தியா 78வது இடத்தில் உள்ளது.
🍀 இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக, ஜி.அசோக் குமார் பொறுப்பேற்றார்.
🍀 மனிதாபிமான சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கூட்டு சமாதான நடவடிக்கைகளில் இராணுவங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா ஆப்ரிக்கா களப்பயிற்சியானது (IAFTX - 2019 - Indiae: Africa Field Traepng Exercise) மார்ச் 18 முதல் மார்ச் 27 வரை புனேவில் நடைபெற உள்ளது.
🍀 டெல்லியில் இந்திய அளவிலான ஆரோக்கிய பாரத பயண நிறைவு விழா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டுக்குச் சிறந்த மாநிலத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
🍀 அணு ஆயுதங்களை செலுத்தும் திறனுடன் கூடிய, இரண்டு போர்க் கப்பல்கள் தயாரிக்க, அரசு நிறுவனமான, கோவா ஷிப்யார்ட்டுடன், ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
🍀 மத்திய அமைச்சரவையானது தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை, (GSTAT - Goods and Service Tax Appellate Tribunal) உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
🍀 சீனாவில் ஸ்வாட் (SWAT) எனப்படும் தீவிரவாத எதிர்ப்பு கமாண்டோ படையில், பெண்கள் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவுக்கு ஃபால்கன் கமாண்டோ யூனிட் என்று சீன அரசு பெயரிட்டுள்ளது.
🍀 இந்தியாவிற்கு அருகில் உள்ள நாடான பாகிஸ்தான், சமீபத்தில் கரும்புச் சாற்றை (Sugarcane Juice) 'தேசிய பானமாக" (National Drink) அறிவித்துள்ளது.
🍀 இந்தியாவில், ஒயர் இல்லாத, ′பிராட்பேண்ட் சேவை′ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஓர் ஆண்டில், 16 கோடி உயர்ந்துள்ளது என, ′டிராய்′ எனும் தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment