ஒரு கத சொல்லட்டுமா?
இரவு குளிரில் நடுங்கும் நாய் நினைக்குமாம் கண்டிப்பாக விடிந்தவுடன் ஒரு போர்வை வாங்கிகொள்ள வேண்டும் என்று, மறுநாள் காலையில் வெயிலிலை பார்தததும் போர்வை வாங்க வேண்டும் என்பதையே மறந்துவிடுமாம் அன்று இரவு மீண்டும் நினைக்குமாம் நாளைக்கு கண்டிப்பாக போர்வை வாங்க வேண்டும் என்று இப்படியே ஒவ்வொரு இரவும் நினைக்குமாம் அந்த நாய், கிராமங்களில் இப்படியோரு கதை சொல்வார்கள் அதை போன்றதுதான் வெளிநாட்டு வாசிகளின் வாழ்க்கை!
குடும்பத்தை,குழந்தைகளை விட்டு கண்ணீருடன் விமானம் ஏறுபவர்கள் இதுதான் என்னுடைய இறுதி பயணம் அடுத்த முயற்சி ஊரிலே செட்டில் ஆவதுதான் என்று நினைப்பவர்கள் வெளிநாடு வந்ததும் அதற்கான முயற்சியை எடுக்காமல் வேறு பல காரியங்ககளில் பணத்தை செலவாக்கிவிட்டு காலத்தை ஓட்டிவிட்டு அடுத்த விடுப்பில் ஊருக்கு செல்வார்கள் மீண்டும் மேலே குறிப்பிட்டதைப்போல் நினைத்துக்கொண்டு மீண்டும் திரும்புவார்கள் இப்படியே 15 முதல் 25 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே இளமையை தொலைத்துவிட்டு போனஸாக சுகர்,பிரசர்,சொட்டை தலை,உடல் பருமன் இன்னும் ஏராளமான நோய்களை பெற்றுகொண்டு 45க்கு மேல் சிலர் 50 க்கு மேல் ஊருக்கு திரும்புவார்கள். திருமணம் முடிந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் அதில் குடும்பத்துடன் இருந்த நாட்கள் 3 முதல் 4 வருடங்கள், ஆக சராசரியாக 60 வயதுக்குப்பிறகு மரணிக்கப்போகும் மனிதர்கள் சந்தோசமாக குடும்பத்துடன் வாழ்வது சொற்பத்திலும் சொற்பம்!
இதில் வெளிநாட்டிற்கு குடும்பத்தை அழைத்து வந்து வைத்துக்கொண்டு 4 சுவற்றுக்குள் வார நாட்களையும் வாரவிடுமுறையில் ஷாப்பிங் மால்களில் சுற்றிவிட்டு கலர்கலராக கிரடிட் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு கடன் மேல் கடன் அதை அடைக்க இன்னொரு கடன் என்று ஆடம்பரமாக வாழ்ந்துவிட்டு இங்கே எதற்காக வந்தோம் என்பதை மறந்து பலவருசத்தை கழித்துவிட்டு ஊருக்கு செல்கையில் வெறும்கையுடன் செல்பர்களும் உண்டு!
(மேலே சொன்னதில் மிகசிலர் விதிவிலக்காக இருக்காலம் )
இதற்கெல்லாம் காரணம் வாழ்வதென்றால் பணம் சம்பாதிப்பதுதான் என்ற நினைப்பதுதான் அதிலும் அதை வெளிநாட்டில்தான் சம்பாதிக்க முடியும் என்று நினைப்பதும், ஒரு மனிதனுக்கு சந்தோசம் என்பது எது என்பதைபற்றிய தவறான புரிதல்
எல்லாம் சரி! ஊரிலே இருந்தால் சொத்துக்கள் வாங்கி செட்டில் ஆகமுடியுமா வசதியாக வாழ முடியுமா?
அப்படியானால் ஊரிலே தொழில் செய்பவர்கள் சொத்தெல்லாம் வாங்கி வசதியாக வாழ்கிறார்களே எப்படி?
சரி வெளிநாட்டிற்கு சென்றவர்கள் எல்லாரும் சொத்துபத்துக்கள் வாங்கி வசதியாக வாழ்கிறார்களா? பல வருடத்தை வெளிநாட்டில் கழித்தவர்கள் இன்னும் அதே நிலையில் இருப்பது ஏன்?
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பிழைக்கிறார்கள் இதில் வெளிநாட்டு சம்பளத்தை இன்னும் அதைவிட அதிகமாய் சொந்த நாட்டிலேயே சம்பாதிக்கிறார்கள் வசதியாக வாழ்கிறார்கள், அதெப்படி?
இதற்கெல்லாம் காரணம் நாம் எடுக்கும் முயற்சியும் நாம் பயணிக்கும் பாதையுமே .
வெளிநாட்டில் சம்பாதித்த வசதியானவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு அயல்நாட்டை நோக்கி ஓடுபவர்கள் இந்தியாவிலேயே தொழில் செய்து முன்னேறியவர்களை ஓர் உதாரணமாக எடுப்பதில்லை என்பதே இதற்கு காரணம்!
சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு சிறியதாய் தொடங்கிய தொழில்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் வீட்டில் அடுப்பு எரிய காரணமாகி பெரும் தொழிலாக வளர்ந்து இலட்சங்களில்,கோடிகளில் வருமானம் ஈட்டுகிறது,
வெளிநாட்டில் சம்பாதிப்பது அத்தனை எளிதல்ல! இதில் பெற்றதைதை விட இழந்தது ஏராளம்!
30 நாள் விடுப்பில் வந்து திருமணம் செய்து விட்டு பயணம்!
தனக்கு பிறந்த குழ்ந்தையை காண இயலாத அவலம்!
இறக்கும் தருவாயில் இருக்கும் பெற்றோரகளின் பக்கத்தில் இருக்க இயலாத கொடுமை!
கண்டிக்க தகப்பன் இல்லாததால் கெட்ட பழக்கத்தில் விழுந்து தறுதலையாய் போகும் மகன் !
சொந்த பிள்ளைகளின் திருமணத்தை வெளிநாட்டிலிருந்து வீடியோகாலில் பார்த்து ஏங்கும் தந்தை!
விமான நிலையத்தில் கண்ணீரை விட்டு கதறும், மணைவி,குழந்தைகள் அதை தாங்க முடியாமல் கண்களை துடைத்துகொண்டு நடைபிணமாய் விமான நிலையத்துக்குள் கடந்து செல்லும் தகப்பன்..
இதுபோன்று கொடுமைகள் ஏராளம்...
இந்தியாவை விட மக்கள் தொகையை அதிகம் வைத்திருக்கும் சீனர்களை வெளிநாடுகளில் எங்காயாவது வீட்டு ட்ரைவர் வேலையிலோ அல்லது ஆடுமாடு மேய்க்கும் வேலையோ அல்லது குறைந்த சம்பளத்தில் கடினமான கட்டுமான வேலை செய்யும் வேலையிலோ அல்லது அடிமாட்டு சம்பளத்தில் எஞ்சினியராக பார்த்து இருக்குறீர்களா?
இல்லையல்லவா ஏன்?
ஏனென்றால் அவர்கள் பல பொருட்களை தயாரிப்பதிலும் வியாபாரம் செய்வதிலும் ஒரு உயரத்தை அடைந்து அதில் பயணித்துகொண்டிருக்கிறார்கள்,
அவ்வளவு ஏன்? இந்தியாவில் சில சமுதயாத்தை சார்ந்தவர்கள் குண்டூசி முதல் வைரம் வரை அனைத்துவித வியாபாரம் செய்கிறார்கள் இளம் வயதிலேயே பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு செல்ல ட்ராவல் ஏஜென்டுகளை தேடி அலைவதில்லை, பல தொழில்களிலும் கொடிகட்டி பறக்கிறார்கள்!
எதையாவது சொல்லிக்கொண்டு வெளிநாடே கதி என்று இருக்கவில்லை!
அனைவரும் வேலை தேடியே அலைந்தால் யார்தான் அனைவருக்குமான வேலையை உருவாக்குவது?
தயவுசெய்து அடுத்த தலைமுறையை யாவது ஊரில் வாழவிடுங்கள்
ஊரில் உள்ளவனுக்கு பெண் கொடுங்கள்
பாவம் வெளிநாட்டுவாசிகள்
உங்களது பிள்ளைகளையும் இப்படி கஸ்டபடுத்த போகிறீர்களா..
No comments:
Post a Comment