விலை மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பிரிவை உருவாக்கியுள்ள முதல் மாநிலம் எது? - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா கிராமமாக உருவாக்கிட, மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் 'தர்வாஷா பாண்ட் - பகுதி 2" (Darwaza Band - Part 2) என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
🍀 இட்லி, உப்புமா, டோக்ளா போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை, 3 அல்லது 4 ஆண்டுகள் கெட்டுப் போகாமல் பராமரிப்பதற்கான, புதிய தொழில் நுட்பத்தை மும்பை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயற்பியல் பேராசிரியை, டாக்டர் வைஷாலி பாம்போலே கண்டுபிடித்துள்ளார்.
🍀 பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு, நேர்மறை தரக் குறியீட்டை மூடிஸ் வழங்கியுள்ளது.
🍀 30 ஆண்டுகளுக்கு பிறகு, தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறும் என, ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ′ஏபிசி′ நிறுவனம் அறிவித்துள்ளது.
🍀 கேரளா, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளை கண்காணிக்கும் 'விலை மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பிரிவை" உருவாக்கியுள்ள முதல் மாநிலமாகும்.
🍀 உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் 2018-ம் ஆண்டு 4வது இடத்தை பிடித்துள்ளது.
🍀 தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கு.ஞானதேசிகன், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 சென்னை ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளராக (ICF General Manager) 'இராகுல் ஜெயின்" நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இந்திராசென் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு அதிவேக முப்பரிமாண அச்சு இயந்திரமான, 30 - 120 நிமிடங்களில் அச்சிட்டு தரும், 3டி பிரின்டரை உருவாக்கியுள்ளது.
🍀 பாகிஸ்தான் இராணுவம் 'நசர்" (NASR) என்ற குறுகிய வரம்புடைய (ளுhழசவ - சுயபெந) தரையிலிருந்து தரையிலக்கைத் தாக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
No comments:
Post a Comment